வியாழன், 29 ஜூன், 2017

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு! June 28, 2017

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!


இறைச்சிக்கான மாடு விற்பனை கட்டுப்பாடுகளுக்கான இடைக்கால தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

மதுரையைச் சேர்ந்த செல்வகோமதி மற்றும் மதுரை கலிமங்கலத்தை சேர்ந்த ஆசிக் இலாகி பாவா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் 4 வாரத்திற்கு இடைக்கால தடை விதித்து கடந்த 30-ந் தேதி உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் செல்வம் மற்றும் ஆதிநாதன் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இடைக்கால தடையை மேலும் 4 வாரங்கள் நீட்டித்ததோடு, மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் அளித்து நீதிபதிகள்  உத்தரவிட்டனர்.