வெள்ளி, 30 ஜூன், 2017

பொதுமக்களின் தாக்குதலில் உயிரிழந்த திருடர்கள்! June 30, 2017

பொதுமக்களின் தாக்குதலில் உயிரிழந்த திருடர்கள்!


பீகார் மாநிலத்தில்  திருடர்கள் இருவரைப் பொதுமக்கள் கடுமையாகத் தாக்கியதை அடுத்து, அவர்கள் உயிரிழந்தனர். 

பீகார் மாநிலம் ரோத்தாஸ் பகுதியில்  நேற்றிரவு ஒரு வீட்டில் புகுந்து, இரண்டு திருடர்கள் கொள்ளையடித்தனர். தூங்கிக் கொண்டிருந்த அவ்வீட்டை சேர்ந்தவர்கள் திருடர்கள் வீட்டில் நுழைந்ததை உணர்ந்து கூச்சலிட்டனர்.

இதனை அடுத்து, அவ்வீட்டை சுற்றிவளைத்த  ஊர்மக்கள், வீட்டில் நுழைந்த திருடர்களை வெளியே இழுத்து வந்தனர். தொடர்ந்து, கையில் கிடைத்ததைக் கொண்டு திருடர்களை பொதுமக்கள் கடுமையாகத் தாக்கினர். 

ஏராளமானோர் கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டதால் வலி தாங்கமுடியாமல், தங்களை மன்னித்துவிடுமாறு திருடர்கள் இருவர்கள் கெஞ்சினர். இருந்தபோதிலு, கோவம் தணியாத  பொதுமக்கள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டதால் கடுமையான காயங்களுக்கு உள்ளான  இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.