திங்கள், 31 ஜனவரி, 2022

ஒலித்த ‘திராவிட நாடு வாழ்க’ பாடல்

 மகாத்மா காந்தியின் 75ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்த்தூவி மரியாதைச் செலுத்தினர்.இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வந்த ஆர் என் ரவி, காரிலிருந்து இறங்கும் போது, “வாழ்க வாழ்க திராவிடர்; வாழ்க திராவிட நாடு; வாழ்க!” என்ற பாடல் பாடப்பட்டது. இந்தப் பாடலை...

கிரிமினல் வழக்கு இருந்தால் கவுன்சிலர் சீட் இல்லை: ஸ்டாலின் கறார் உத்தரவு

 31 1 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட எந்தக் கட்சியினருக்கும், கிரிமினல் குற்றச்சாட்டு பின்னனி உள்ள பெண்கள் உள்ளிட்ட கட்சியினர் யாருக்கும் சீட்டு வழங்கப்பட மாட்டாது என்றும், அதை நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.நேற்று (ஜனவரி 30) கட்சித் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய ஒரு திறந்த கடிதத்தில், கூட்டணிக் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு நெருடல் ஏற்படாத வகையில்...

குறைய துவங்கிய பாசிட்டிவ் விகிதம்; இந்தியாவில் மூன்றாம் தொற்று முடிவுக்கு வருகிறதா?

 31 1 2022 declining Covid-19 positivity rate : கொரோனா தொற்று பரவல் கடந்த 10 நாட்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது பாசிட்டிவிட்டி ரேட்டும் குறைந்துள்ளது, இந்தியாவில் கொரோனா தொற்று மூன்றாம் அலை முடிவுக்கு வருவதை உறுதி செய்கிறது.கடந்த இரண்டு நாட்களில் வாரத்திற்கான கொரோனா பாசிட்டிவிட்டி ரேட் வியாழக்கிழமை 16.48%-ல் இருந்து சனிக்கிழமை 15.63% ஆக குறைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அதிகமாக இருந்த பாசிட்டிவிட்டி விகிதம் தற்போது குறைய...

கேரளாவின் சில்வர்லைன் திட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்; காரணம் என்ன?

 30 1 2022 Protests against Kerala SilverLine grow; in village after village, concern over ‘secrecy’: கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள நூரநாடு கிராமத்தில், சாலையின் ஓரத்தில், ஒரு பெரிய உள்கட்டமைப்பு திட்டத்தின் அடையாளமாக செவ்வக தடுப்புக் கல் நடப்பட்டுள்ளது. இது 2019 ஆம் ஆண்டில், இரவு நேரத்தில் நடப்பட்டதாக உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.தடுப்பு எதற்காக என்று அவர்களிடம்...

தீவிரமடையும் உக்ரைன் – ரஷ்யா விவகாரம்: இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

 31 1 2022 உக்ரைன் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால், ரஷ்யாவிற்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒன்றரை மாதங்களாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இவ்விவகாரம் குறித்து இந்தியா தனது கருத்துகளை தெரிவிக்காமல் இருந்த நிலையில், தற்போது முதன்முறையாக அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.என்ன பிரச்சினை?உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்துள்ளது. அதே சமயம், தனது அண்டை நாடு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால்,...

பட்ஜெட் கூட்டத்தொடர்; குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடக்கம்

 31 1 2022 Budget 2022 Tamil News: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கிறார். மேலும், 2022-23 நிதியாண்டுக்கான (ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரை) நிதிநிலை அறிக்கையை நாளை (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்கிறார்.இன்று முதல் தொடங்க உள்ள இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்...