வியாழன், 17 செப்டம்பர், 2015

88 பேரை பலிகொண்ட வெடி விபத்து - குற்றவாளி ஆர்எஸ்எஸ் அமைப்பை சார்ந்தவன் :

மத்திய பிரதேச மாநிலத்தில் 88 பேரை பலிகொண்ட வெடி விபத்து - குற்றவாளி ஆர்எஸ்எஸ் அமைப்பை சார்ந்தவன் :
மத்திய பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டத்தில் உள்ள பெத்லவாத் நகரில் நிகழ்ந்த வெடி விபத்தில் 3 மாடிக் கட்டிடம் ஒன்று தரைமட்டமாகி 88 பேர் பலியானார்கள். அந்த கட்டிடத்தின் உணவகத்தில் இருந்த சிலிண்டர் வெடித்ததே இந்த விபத்திற்குக் காரணம் என ஊடகங்கள் உண்மையை மறைத்து செய்திகளை கூறி வந்த நிலையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட டெட்டனேட்டர்களே கட்டிடத்தை தரைமட்டமாக்கியதாக பின்னர் தகவல் வெளியானது.
இந்நிலையில் தரைமட்டமான கட்டிடத்தின் அருகே உள்ள "ராஜேந்திர கஸ்வா" என்பவனுக்கு சொந்தமான வீட்டில் போலீசார் நேற்று முன்தினம் சோதனையிட்டபோது 69 டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட சக்தி வாய்ந்த வெடி பொருட்களை கைப்பற்றினர்.உணவகம் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த டெட்னேட்டர்களே விபத்துக்குக் காரணம் என தற்போது செய்தி சொல்கிறார்கள்.
இந்த மிகப்பெரிய பயங்கரவாத செயலை செய்த ராஜேந்திர கஸ்வா என்பவன் ஆர்எஸ்எஸ் அமைப்பை சார்ந்தவன். இந்த குண்டு வெடிப்பு சதி செயலுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் நிச்சயமாக தொடர்பு இருக்கிறது.ஆர்எஸ்எஸ் அமைப்பை சார்ந்தவன் சக்தி வாய்ந்த வெடிபொருட்களை எதற்காக சேமித்து வைத்துள்ளான் .?எங்கே .? எந்த நகரத்தில் இவர்கள் நாச வேலை செய்ய திட்டமிட்டிருந்தார்கள்.? என்பதை பற்றியெல்லாம் விசாரணை செய்திட நாட்டில் நேர்மையான காவல்துறை அதிகாரியும் இல்லை. இதையெல்லாம் பெரிதுபடுத்தி எந்த ஊடகமும் செய்தி வெளியிடப் போவதும் இல்லை.
நாட்டில் நடைபெற்ற அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதுதான் புலனாய்வு விசாரணை அறிக்கைக்கு பின்னர் தெரிய வந்த உண்மைகள். மாறாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் தூண்டுதலின் பேரில் செயல்படும் சங்பரிவார அமைப்புகள் தான் நாட்டில் நடைபெற்ற அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் காரணம் என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி வருகிறது.
ஊடகங்கள் தங்கள் நடுநிலைத்தன்மை யிலிருந்து விலகி போய் பல வருடங்கள் ஆகி விட்டது.
பாபர் மஸ்ஜித் இடிப்புக்கு பின்னர் ,குற்ற செயல் நடந்த மறு வினாடியில் "முஸ்லிம் தீவிரவாதம் ",என்றே அவதூறாக செய்தி சொல்கின்றன.ஆனால் நிரூபிக்கப்பட்ட காவி பயங்கரவாதம் பற்றிய செய்திகளை திட்டமிட்டே மறைக்க முயலுகிறார்கள்.
தோழமைகளே ........!
ஊடகங்கள் செய்ய தவறும் அறத்தை நாம் செய்வோம் .!
இந்திய மக்களிடையே இந்த செய்திகளை நாம் கொண்டு போய் சேர்ப்போம்.!!
நிச்சயமாக ஒருநாள் உண்மை உணரப்படும்.!!!
- புளியங்குடி S.செய்யது அலி.