வெள்ளி, 25 செப்டம்பர், 2015

மின்தடை ஏற்படுத்திய காவி அரசாங்கத்திற்கு கண்டனம்!

பெருநாளன்று மின்தடை ஏற்படுத்திய
காவி அரசாங்கத்திற்கு கண்டனம்!
(தினம் ஒரு தகவல் 25.09.15)

திருவிழா கொண்டாடுகின்றோம் என்ற பெயரில்...
ரசாயன சிலைகளை குளங்களில் கரைத்து குந்தகம் விளைவித்தோமா?
பூசணிக்காயை நடுரோட்டில் உடைத்து உயிர்பலி ஏற்படுத்தினோமா?
பட்டாசுகளை வெடித்து இதய நோயாளிகளை நோவினை செய்தோமா?
போகி என்ற பெயரில் ஆஸ்துமா நோயாளிகளை அவஸ்தைக்குள்ளாக்கினோமா?
கும்பமேளா என்ற பெயரில் குத்தாட்டம் போட்டோமா?
ஹோலி எனச்சொல்லி கண்ணில் பொடி தூவி குருடர்களாக்கிவிட்டோமா?
இல்லை; இல்லை; இவற்றில் எதுவுமே இல்லை;
இரண்டு பெரு நாட்களிலும் ஏழைகளுக்கு உணவு கொடுத்து மகிழ்கின்றோம்.
இப்படி அடுத்தவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் கொடுத்து மகிழும் முஸ்லிம்களை பெரு நாளைக்கூட மகிழ்ச்சியாக கொண்டாட விடாமல் அன்றைய தினம் மின்சாரத்தை தடை செய்து முஸ்லிம்களது மகிழ்ச்சியை கெடுத்து அற்ப சந்தோஷம் அடைந்து கொண்ட காவி அரசாங்கத்திற்கு கண்டனம் விடுக்கின்றது இன்றைய தினம் ஒரு தகவல்