வியாழன், 10 செப்டம்பர், 2015

இஸ்லாத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு ஐஎஸ் தீவிரவாதிகள் செய்வது முற்றிலும் இஸ்லாத்துக்கு விரோதமானது

வரவேற்கப்பட வேண்டிய மார்க்கத் தீர்ப்பு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஐஎஸ் அமைப்பு முழுக்க முழுக்க இஸ்லாத்துக்கு
எதிரானது என்று
இந்தியாவிலுள்ள தலைசிறந்த மார்க்க அறிஞர்களில்
1050 பேர் கையெழுதிட்ட ஃபத்வா வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மார்க்கத் தீர்ப்பு ஐநா பொதுச்
செயலாளரிடமும் அளிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளையும் பெண்களையும்
முதியவர்களையும் துறவிகளையும்
கொல்லக் கூடாது என்பது இஸ்லாம் அறிவுறுத்தும் பாடம்.
ஏன் மரங்களையும் பயிர்களையும்கூட போரின்போது
அழிக்கக் கூடாது என்று அறிவுறுத்தும் மார்க்கம்தான் இஸ்லாம்.
ஆகவே இஸ்லாத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு
ஐஎஸ் தீவிரவாதிகள் செய்வது முற்றிலும் இஸ்லாத்துக்கு
விரோதமானது என்று அந்த மார்க்கத் தீர்ப்பில்
அறிஞர் பெருமக்கள் கூறியுள்ளனர்.
முழுமனதோடு வரவேற்கப்பட வேண்டிய மார்க்கத் தீர்ப்பு.