புதன், 9 செப்டம்பர், 2015

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் மூலிகைகள்.

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.'s photo.

இந்தியாவில் பெரும்பாலான மக்களை வாட்டி வதைக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.
நாவல்பழக் கொட்டை
நாவல் பழக் கொட்டைகளை காயவைத்து நன்கு இடித்து பொடி செய்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
மாந்தளிர் பொடி
மாமரத்தின் தளிர் இலைகளை எடுத்து உலர்த்தி இடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அந்த கஷாயத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.
வேப்பம்பூ பொடி
வேப்பம் பூ, நெல்லிக்காய் பொடி, துளசி பொடி, நாவற்கொட்டை பொடி ஆகியவற்றை சேர்த்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.
இசங்கு வேர்
இசங்கு வேரை உலர்த்தி பொடியாக்கி தினமும் 5 கிராம் அளவு தேனில் கலந்து உண்டு வந்தால் சுரம் மற்றும் விஷக்கடி நீங்கும். நீரிழிவு நோயாளிகள் இசங்குவேர் பொடியை நீரில் கலந்து அருந்தினால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.
வெந்தையக் கீரை
வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அதை நன்றாக மசித்து தினமும் அந்த நீரை குடித்து வந்தால் நீரிழிவு குறையும். வெந்தையக்கீரை சாப்பிடுவதன் மூலம் டைப் 1 டைப் 2 நீரிழிவு நோய் கட்டுப்படும் உடலில் அதிக கொழுப்புச் சத்து தங்குவதை தடுக்கிறது.
அவரைக்காய்
பிஞ்சு அவரைக்காயை நறுக்கி பொரியல் செய்து தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.
பாதம் பருப்பு
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு குணமாகும்.

Related Posts:

  • இஸ்ஸாமிய இயக்க தலைவர்களே ! கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ராஜீவ் கொலை வழக்கு சிறைவாசிகளை விடுதலை கோரி ஒட்டுமொத்த தமிழகமும் சென்னையில் அதுபோல் கடந்த 20ஆண்டுகளாக சிறை… Read More
  • Missing திருச்சி அரியமங்கலம் சிவகாமி அம்மையார் தெருவைச் சேர்ந்தவர் காதர் மைதீன். இவரது மகன் கமர் (எ) ஷாஹின்ஷா . இவர் தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியில் 10 ம்… Read More
  • Hadis சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது: நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமைய… Read More
  • ஹிந்து இளைஞர்களுக்கு ஆண்மை குறைவு!!? - பிரவின் தொகடியா பேச்சு ஹிந்து இளைஞர்களின் 'ஆண்மை சக்தி'யை அதிகரிக்க 'லேகியம்' கொடுப்போம்: ரூ.600 அடக்க விலை கொண்ட 'செக்ஸ்' மருந்து ரூ.500-க்கு வழங்கப்படும்..! -பிரவ… Read More
  • "சொந்த வரலாற்றை மறந்த சமுதாயம் வரலாறை படைக்க இயலாது' "சொந்த வரலாற்றை மறந்த சமுதாயம் வரலாறை படைக்க இயலாது' இது அமெரிக்க கறுப்பு நிறத்தவர்களுக்கு மட்டுமல்ல ஆக்கிரமிப்பிற்கும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட… Read More