புதன், 23 செப்டம்பர், 2015

சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் 17 மாடுகள் பிடிக்கப்பட்டது

Blue cross அட்டூழியம் ஆரம்பம்

திருவள்ளூர் மாவட்டம் உத்துக்காட்டில்
5 ஒட்டகங்கள் பிடித்து கோசலயில் (வேப்பேரில்) அடைக்கப்பட்டுள்ளது ..
காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு
பேசிய பின் பூந்தமல்லியில் பிடித்து வைத்துள்ள
மாடுகளை விட்டுவிடுவதாக நசரத் பேட்டை ஆய்வாளர்
எங்களிடம் சொன்னார் ...
திருவள்ளூர் உத்துக்காட்டில் பிடித்து வைத்துள்ள
ஒட்டகங்களை வழக்கு தொடுத்துள்ளதாக தகவல் வருகின்றது திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.யிடம் நாம்
பேசிய போது ஒட்டகங்களுக்கு சரியான ஆவணங்கள்
இருந்தால் நாங்கள் விட்டுவிடுவோம் ஆனால் ஆவணங்கள் இல்லையே என்றார் .
ஒட்டகங்களுக்கு என்ன முறையான ஆவணங்களை கொடுக்க முடியும் என கேட்ட போது பதில் இல்லை .
குர்பாணிக்கு கொண்டு வரும் ஆடு , மாடு , ஒட்டகங்களை தொடர்ந்து மடக்கி தொந்தரவு செய்தால்
தமிழக சட்டமன்றத்தை முற்றுக்கையிட்டு போராட்டத்தை இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக நடத்த வேண்டி இருக்கும் இன்ஷாஅல்லாஹ் ..