திங்கள், 30 நவம்பர், 2015

கோவையில் ஷஹீதான 19 முஸ்லிம்கள்

1997 நவம்பர் படுகொலை நினைவுநாள்
கோவையில் ஷஹீதான 19 முஸ்லிம்கள்
1997 நவம்பர் 30 தொடங்கி மூன்று நாட்களில் கோயம்புத்தூரில் காவி சிந்தனை கொண்ட பல போலீசாரும் ஆர்எஸ்எஸ் இந்துமுன்னணி பயங்கரவாதிகளும் கூட்டாக இணைந்து 19 முஸ்லிம்களை கொலை செய்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள முஸ்லிம்களின் வியாபார நிறுவனங்களையும் வீடுகளையும் கொள்ளையடித்து தீக்கிரையாக்கி ஒரே நாளில் அவர்களை தெருவில் நிறுத்தினார்கள் .
கோவை அரசு மருத்துவமனையில் வைத்து அர்ஜூன் சம்பத் தலைமையிலான மதவெறி கும்பல் போலீசாரின் முன்னிலையிலேயே 4 முஸ்லிம் இளைஞர்களை படுகொலை செய்தார்கள் .
19 முஸ்லிம்களை படுகொலை செய்தவர்களில் ஒருவர் கூட சட்டத்தால் தண்டிக்கப்படவில்லை .
கோவையில் மட்டுமல்ல போலீசார் துணையோடு ஆர்எஸ்எஸ் சங்பரிவார் தீவிரவாதிகள் நடத்திய படுகொலைகளில்
1969 அக்டோபரில் குஜராத் அகமதாபாத்தில் சுமார் 660 முஸ்லிம்களும்
1983 பிப் 18 அன்று அஸ்ஸாம் மாநிலம் நெல்லியில் 5000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும்
1987 ஏப்ரல் 22 அன்று மீரட் நகர் ஹாஷிம்புராவில் 300 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும்
1989 அக்டோபர் 24 அன்று பீகார் மாநில பாகல்பூரில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும்
1992 டிசம்பர் 6 இல் பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து பம்பாயில் சுமார் 2000 முஸ்லிம்களும்
2002 மார்ச் மாதம் குஜராத்தில் அரசின் துணையோடு சுமார் 2000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் பலியாகியுள்ளனர் . ஆனால் இந்த படுகொலைகளில் ஒருவன் கூட தண்டிக்கப்பட்டதில்லை .
ஒவ்வொரு கலவரங்களிலும் போலீசாரின் துப்பாக்கிசூட்டில் முஸ்லிம்கள் அதிகமான எண்ணிக்கையில் பலியாவதும் அவர்களின் வியாபார நிறுவனங்கள் குறிவைத்து தீக்கிரையாக்கப்படுவதும் கவனித்தால் ஒரு உண்மை புலனாகும் . போலீசாரும் சங்பரிவார் தீவிரவாதிகளும் இணைந்து முஸ்லிம்களை கொலை செய்து அவர்களின் சொத்துக்களை தீக்கிரையாக்கும் பாணி கோவையில் இருந்து குஜராத் வரை ஒரே மாதிரிதான் உள்ளது .
ஒரு சிறு நிகழ்வு கலவரமாக உருவாகும்போது காவல்துறை முஸ்லிம்களின் குடியிருப்பு பகுதிகளை சுற்றிவளைத்து விடுவார்கள் .ஆர்எஸ்எஸ் காவித்தீவிரவாதிகள் போலீசாரின் துணையோடு முஸ்லிம்கள் குறைவாக இருக்கும் பகுதிகளில் கும்பலாக நுழைந்து முஸ்லிம்களை கொலை செய்து அவர்களின் உடமைகளை கொள்ளையடிப்பார்கள் , மறுபுறம் வியாபார நிறுவனங்கள் இருக்கும் பஜார் பகுதியில் நுழைந்து முஸ்லிம்களின் கடைகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஆறஅமர கொள்ளையடித்து அவர்களின் நிறுவனங்களை தீக்கிரையாக்குவார்கள் .கடைகள் தீக்கிரையாக்கப்படுவதை அறிந்து தடுக்க வரும் முஸ்லிம்களை கலவரக் கும்பலாக சித்தரித்து அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்துவார்கள் .இப்படித்தான் ஒவ்வொரு கலவரங்களின் போதும் முஸ்லிம்களின் உயிர் உடமைகளுக்கு அதிகமான சேதம் ஏற்படுகிறது .
இதை என் அனுபவத்தால் மட்டும் கூறவில்லை , குஜராத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை கொலைசெய்த பஜ்ரங்தள் பயங்கரவாதி பாபு பஜ்ரங்கியின் வாக்குமூலமும் ,அந்த படுகொலையின்போது போலீசார் நடந்துகொண்ட வீடியோ ஆதாரமும் இதைதான் கூறுகிறது . ஒருமுறை பாருங்கள் .


1997 நவம்பர் படுகொலை நினைவுநாள் கோவையில் ஷஹீதான 19 முஸ்லிம்கள் 1997 நவம்பர் 30 தொடங்கி மூன்று நாட்களில் கோயம்புத்தூரில் காவி சிந்தனை கொண்ட பல போலீசாரும் ஆர்எஸ்எஸ் இந்துமுன்னணி பயங்கரவாதிகளும் கூட்டாக இணைந்து 19 முஸ்லிம்களை கொலை செய்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள முஸ்லிம்களின் வியாபார நிறுவனங்களையும் வீடுகளையும் கொள்ளையடித்து தீக்கிரையாக்கி ஒரே நாளில் அவர்களை தெருவில் நிறுத்தினார்கள் .கோவை அரசு மருத்துவமனையில் வைத்து அர்ஜூன் சம்பத் தலைமையிலான மதவெறி கும்பல் போலீசாரின் முன்னிலையிலேயே 4 முஸ்லிம் இளைஞர்களை படுகொலை செய்தார்கள் .19 முஸ்லிம்களை படுகொலை செய்தவர்களில் ஒருவர் கூட சட்டத்தால் தண்டிக்கப்படவில்லை .கோவையில் மட்டுமல்ல போலீசார் துணையோடு ஆர்எஸ்எஸ் சங்பரிவார் தீவிரவாதிகள் நடத்திய படுகொலைகளில் 1969 அக்டோபரில் குஜராத் அகமதாபாத்தில் சுமார் 660 முஸ்லிம்களும் 1983 பிப் 18 அன்று அஸ்ஸாம் மாநிலம் நெல்லியில் 5000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் 1987 ஏப்ரல் 22 அன்று மீரட் நகர் ஹாஷிம்புராவில் 300 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் 1989 அக்டோபர் 24 அன்று பீகார் மாநில பாகல்பூரில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் 1992 டிசம்பர் 6 இல் பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து பம்பாயில் சுமார் 2000 முஸ்லிம்களும் 2002 மார்ச் மாதம் குஜராத்தில் அரசின் துணையோடு சுமார் 2000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் பலியாகியுள்ளனர் . ஆனால் இந்த படுகொலைகளில் ஒருவன் கூட தண்டிக்கப்பட்டதில்லை . ஒவ்வொரு கலவரங்களிலும் போலீசாரின் துப்பாக்கிசூட்டில் முஸ்லிம்கள் அதிகமான எண்ணிக்கையில் பலியாவதும் அவர்களின் வியாபார நிறுவனங்கள் குறிவைத்து தீக்கிரையாக்கப்படுவதும் கவனித்தால் ஒரு உண்மை புலனாகும் . போலீசாரும் சங்பரிவார் தீவிரவாதிகளும் இணைந்து முஸ்லிம்களை கொலை செய்து அவர்களின் சொத்துக்களை தீக்கிரையாக்கும் பாணி கோவையில் இருந்து குஜராத் வரை ஒரே மாதிரிதான் உள்ளது . ஒரு சிறு நிகழ்வு கலவரமாக உருவாகும்போது காவல்துறை முஸ்லிம்களின் குடியிருப்பு பகுதிகளை சுற்றிவளைத்து விடுவார்கள் .ஆர்எஸ்எஸ் காவித்தீவிரவாதிகள் போலீசாரின் துணையோடு முஸ்லிம்கள் குறைவாக இருக்கும் பகுதிகளில் கும்பலாக நுழைந்து முஸ்லிம்களை கொலை செய்து அவர்களின் உடமைகளை கொள்ளையடிப்பார்கள் , மறுபுறம் வியாபார நிறுவனங்கள் இருக்கும் பஜார் பகுதியில் நுழைந்து முஸ்லிம்களின் கடைகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஆறஅமர கொள்ளையடித்து அவர்களின் நிறுவனங்களை தீக்கிரையாக்குவார்கள் .கடைகள் தீக்கிரையாக்கப்படுவதை அறிந்து தடுக்க வரும் முஸ்லிம்களை கலவரக் கும்பலாக சித்தரித்து அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்துவார்கள் .இப்படித்தான் ஒவ்வொரு கலவரங்களின் போதும் முஸ்லிம்களின் உயிர் உடமைகளுக்கு அதிகமான சேதம் ஏற்படுகிறது . இதை என் அனுபவத்தால் மட்டும் கூறவில்லை , குஜராத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை கொலைசெய்த பஜ்ரங்தள் பயங்கரவாதி பாபு பஜ்ரங்கியின் வாக்குமூலமும் ,அந்த படுகொலையின்போது போலீசார் நடந்துகொண்ட வீடியோ ஆதாரமும் இதைதான் கூறுகிறது . ஒருமுறை பாருங்கள் .
Posted by இஸ்லாமியர்களின் ஊடகத்துறை on Sunday, November 29, 2015