ஞாயிறு, 22 நவம்பர், 2015

இஸ்லாமியர் என்று நினைத்து இந்து இளைஞர் படுகொலை : இந்துத்துவ தீவிரவாதிகள் இருவர் கைது.....!!


கர்நாடகா மாநில அரசு திப்பு சுல்தானுக்காக விழா நடத்திய போது அங்கே வன்முறையில் ஈடுபட்ட இந்துத்துவ தீவிரவாதிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
இதில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் உட்பட மூன்று பேர் பலியாகினர்.
இதற்கு பழி தீர்க்கும் விதமாக கர்நாடகா மாநிலத்தில் RSS, VHP, பஜ்ரங்தள் இந்துத்துவ தீவிரவாதிகள் கண்ணில் காணும் முஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
மடிகேரி என்னும் இடத்தில் சில தினங்களுக்கு முன் ஹரிஷ் தன் நண்பர் சமியுல்லாஹ் உடன் இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார்.
அப்போது ஒரு ஆம்னி வேனில் வந்த RSS, VHP, பஜ்ரங்தளை சேர்ந்த 5 இந்துத்துவ தீவிரவாதிகள் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவரும் இஸ்லாமியர்கள் என்று நினைத்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
இந்துத்துவ தீவிரவாதிகளின் கொலைவெறி தாக்குதலுக்கு ஹரீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சமியுல்லாஹ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
படுகொலை செய்த 5 பயங்கரவாதிகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரில் புவித் என்பவன் அப்பகுதி பஜ்ரங்தள் தலைவர் என்பது தெரிய வந்துள்ளது. இன்னொருவன் மீது ஏற்கனவே மூன்று பிரிவின் கீழ் வழக்கு இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் மூன்று இந்துத்துவ பயங்கரவாதிகளை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.
பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியாவில் இந்துத்துவ தீவிரவாதம் மனித இனத்தை தொடர்ச்சியாக அழித்து வருகிறது.
இந்துத்துவ தீவிரவாதத்தை வேரோடு அழிக்க வேண்டுமென்றால் இந்து, முஸ்லிம், கிறித்தவ மக்கள் ஓரணியில் நின்று அழிக்க வேண்டும்.
முகநூல் முஸ்லிம் மீடியா's photo.