வியாழன், 26 நவம்பர், 2015

கொன்று தலையை வெட்டி தெருமுனையில் தொங்கவிடுவேன்

அமீர் கான் , ஷாரூக் கான் ஆகிய
இரண்டு நடிகர்களை கொன்று தலையை வெட்டி
தெருமுனையில் தொங்கவிடுவேன்
என அகில பாரத இந்து மஹாசபாவின்
தேசிய தலைவர் கமலேஷ் திவாரி பகிரங்கமாக 
அறிவித்துள்ளார் .
இந்தியாவில் இதுவரை எத்தனையோ நபர்கள்
கொல்லப்பட்டுள்ளனர் ஆனால் இதுவரை யாரும்
நாட்டை விட்டு போக வேண்டும் என சொல்ல
வில்லை முதலில் ஷாரூக் கான் சொன்னார்
இப்போது அமீர் கான் நாட்டில் முஸ்லீம்களுக்கு
பாதுகாப்பு இல்லை அதனால் இந்த நாட்டில் வாழுவது
ஆபத்தானது என கூறியுள்ளார் ..
இந்த இரண்டு நடிகர்களையும் கொன்று தலையை
தெரு முணையில் மாட்ட வேண்டும் என நயவஞ்சக
கருத்துகளை கமலேஷ் திவாரி கூறியுள்ளார்
இந்து மஹாசபா தலைவரின் இந்த கருத்துக்கு
மத்திய அரசு என்ன பதில் சொல்லும் எப்போதும்
பிரதமர் மோடி போல் மெளம் காப்பாரா ?
விஷ்வரூபம் படத்தின் போது கமலஹாசன்
நாட்டைவிட்டு போக போறேன் என அறிவித்த
உடன் எவ்வளவு பெரிய கலைஞன் மனமுடைந்து
இந்த கருத்து சொன்னார் என இந்த நாட்டுக்காக
கமலஹாசன் நடிப்பின் மூலம் எத்துனை தியாகங்களை
செய்துள்ளார் என கூப்பாடு போட்ட அத்துனை பேரும்
அமீர் கான் , ஷாரூக் கான் ஆகியோரை கொன்று தெருமுனையில் தலையை தொங்கவிட வேண்டும்
என அகில பாரத இந்து மஹாசபாவின் தேசிய
தலைவர் கமலேஷ் திவாரி கூறிய கருத்துக்கு
எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ஏன் ?
இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என சொன்ன
நடிகர்கள் அமீர் கான் , ஷாரூக் கான் ஆகியோரின்
கூற்று சரி என்பது போல் தான் அகில பாரத இந்து
மஹாசபா தலைவர் கமலேஷ் திவாரி தலையை
வெட்டி தெரு முணையில் மாட்டுவோம் என்று
ஆஜ்-தக் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் .
எவ்வளவு பெரிய கலைஞன் மனமுடைந்து
இந்த கருத்து சொன்னார் என இந்த நாட்டுக்காக
கமலஹாசன் நடிப்பின் மூலம் எத்துனை தியாகங்களை
செய்தார் என சொன்னவர்கள் அமீர் கான் , ஷாரூக் கான் ஆகியோர் எவ்வளவு பெரிய நடிகர்கள் கமலஹாசனாவது
தமிழ்நாட்டு நடிகர் தலையை வெட்டுவேன் என சொன்ன
அமீர் கான் , ஷாரூக் கான் தேசிய நடிகர்கள் இந்தியாவின்
கெளரவம் உலக அரங்கில் உயர்தியவர்கள் என்றால்
அது மிகையான செயல் அல்ல அப்படி பட்டவர்களை
கொன்று தலையை தெரு முணையில் மாட்டுவோம்
என்று பகிரங்கமாக அறைகூவல் விடுத்த அகில
பாரத இந்து மஹாசபாவின் தேசிய தலைவர்
கமலேஷ் திவாரி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா ?
அல்லது எப்போவதும் போல சட்டம் அமைதி காக்குமா ?
இந்தியாவின் இன்றைய உண்மை நிலையை அறிவித்த
தைரியமாக அறிவித்த நடிகர்கள் அமீர் கான் , ஷாரூக் கான் தேசிய நடிகர்களை தலையை வெட்டி தெரு முனையில்
மாட்டுவோம் என கூறிய கமலேஷ் திவாரியை இந்திய தேசிய லீக் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது ..
கமலேஷ் திவாரியை மத்திய அரசு உடனே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டு என மத்திய அரசை
வலியுறுத்துகின்றது ..