செவ்வாய், 5 ஜனவரி, 2016

சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால்,

Plp Sekar's photo.

உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது .
ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம், ஆர்சனிக், துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது.
இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ, மைக்ரேன் தலைவலி,
மூளை பாதிப்பு, உடல்அசைவுகள், பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம்.
அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம்...
சி. எஃப். எல். பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்...?
* உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும்.
அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது. பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம்.
நொருங்கிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும்...
* வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது.
வேக்வம் உறிஞ்சப்பட்டால், அது உள்ளே ஒட்டிக்கொள்ளும்.
அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரி துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி, மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும்...
* கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு
சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்தலாம்...
* உடைந்தத் துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து, 'சீல்' செய்யவும்.
சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல், கார்ப்பரேஷன் 'ரீசைக்ளீங் பின்' னில் கொண்டு சேர்த்தால்,
அவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விடுவார்கள்...
முடிந்த வரையில் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை அனைவருக்கும் பகிரவும்...!

Related Posts:

  • எளிய மருத்துவக் குறிப்புகள் தேமல் மறையகருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும். வாயு கலையவெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்… Read More
  • Plan படி எல்லாம் Correcta போய்கிட்டு இருக்கு Boss. 01.இரசாயன உரங்களை தெளிக்க சொல்லி,இயற்கை விவசாயத்தை ஒழித்து மண்ணை மலடாக்கினோம்.. 02.நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் சோம்பேறி யாக்கி விவசாயத்திற்க… Read More
  • ரம்புட்டான் பழம்..! ரம்புட்டான் பழம்..! ரம்புட்டானின் தாய்நாடு மலேசியா எனக் கருதப்படுகிறது.ஆரம்ப காலங்களில் தெற்காசியாவின் கிழக்கு வலய நாடுகளில் பிரதானமாக பயிர்ச்செய… Read More
  • கர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம் மகப்பேறு காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை முறை ஆகியவை சரியாக பின்பற்றப்பட வேண்டும் என்று ஆயுர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இவை மூ… Read More
  • இந்தியர்களின் தேசிய வியாதி மறதி . நன்றி ! உலகின் முதல் பத்து சக்திமிக்க நாடுகளில் ஒன்றான இந்தியா ஓலிம்பிக் போட்டிகளில் மண்ணை கவ்வ காரணம் ஏராளம் ,ஏராளம். இந்தியாவில் விளையாட்டு என்றால் அது கி… Read More