ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த சர்ச்சைக்குரியதாக கருதப்படும் விழாவில் கலந்து கொண்ட 20 பேரின் பெயர்கள் கொண்ட பட்டியலை டெல்லி போலீஸார் தயாரித்துள்ளனர். இந்த 20 பேரும் தேச துரோகிகள் என்று டெல்லி போலீஸ் வர்ணித்துள்ளது. இவர்களைக் கைது செய்ய நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாம். பிப்ரவரி 9ம் தேதி பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவின்போது இந்
தியாவுக்கு எதிராக கோஷம் போட்டவர்களிடையே இவர்களும் இருந்தனராம். இவர்களைத்தான் தேடி வருவதாக போலீஸார் கூறுகிறார்கள். சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட 12 வீடியோ பதிவுகளை வைத்து இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவர்களைத் தேடி வருவதாகவும் போலீஸார் கூறுகின்றனர். இவர்கள் குறித்து கன்யா குமார், அனிர்பன் பட்டச்சார்யா, உமர் காலித் ஆகியோரிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் இவர்களைப் பற்றித் தெரியாது என்று கூறி விட்டனராம். மேலும் கன்யா கூறுகையில், நான் விழாவின் கடைசிக் கட்டத்தில்தான் அங்கு வந்தேன். இந்த நபர்கள் யார் என்ற விவரம் தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளாராம். எனவே இந்த 20 பேரும் பல்கலைக்கழகத்தைச் சேராதவர்கள் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் போல ஊடுறுவியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த வழக்கை சிறப்புப் பிரிவுக்கு டெல்லி போலீஸார் மாற்றியுள்ளனர்.
ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016
Home »
» எங்கே இந்த 20 “தேச துரோகிகள்”.. லிஸ்ட் போட்டு தேடும் டெல்லி போலீஸ்!
எங்கே இந்த 20 “தேச துரோகிகள்”.. லிஸ்ட் போட்டு தேடும் டெல்லி போலீஸ்!
By Muckanamalaipatti 9:34 AM
Related Posts:
விரைவில் தொடங்கும்105 கிமீ ECR விரிவாக்கப் பணி! Chennai NHAI will soon resume work on expanding to four lanes the 105km stretch of the ECRமகாபலிபுரம் மற்றும் புதுச்சேரி இடையே கிழக்கு கடற்கரை ச… Read More
மந்திரவாதிகளிடம் ஏமாறும் முஸ்லிம்கள்..மந்திரவாதிகளிடம் ஏமாறும் முஸ்லிம்கள்.. #Arulvaakku | N.அல் அமீன் - மாநிலச் செயலாளர்,TNTJ ரமலான் - 2022 - தொடர் - 13 மூடநபிக்கைகள் விழிப்புணர்வு ந… Read More
இந்தியாவின் பிரதமர்கள் ராஜீவ் காந்திக்கு ஒதுக்கப்பட்ட பிரிவில் அதிகம் பிரபலம் இல்லாத ஷா பானோ வழக்கு, போபால் விஷவாயு துயரம் மற்றும் போஃபர்ஸ் ஊழல் ஆகியவை குறிப்பிடப்பட்ட… Read More
ஆளுநர் தேநீர் விருந்து 14 4 2022நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்துவருவதால், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் த… Read More
ரஷ்ய போர்க் கப்பலை கடுமையாக சேதப்படுத்தியதா நெப்டியூன் ஏவுகணை? 14 4 2022 உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. அதேநேரம், மேற்கத்திய நாடுகளிடம் ராணுவத் தளவாட உதவியைப் பெற்று ரஷ்ய ராணுவத்… Read More