சண்டிகர்: சாலையில் சென்ற வாகனங்களில் பயணித்த பெண்களை, ஜாட் போராட்டக்காரர்கள், இழுத்துச்சென்று கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண்களின் உள்ளாடைகள் சோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒ
துக்கீடு கேட்டு ஜாட் இன மக்கள் ஹரியானா மாநிலத்தில், போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் இருந்து 50 கி.மீ தொலைவில் முர்தால் என்ற பகுதியில், பெண்கள் பலர் போராட்டத்தின் நடுவே பலாத்காரத்திற்கு உள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. லாரி டிரைவர் ஒருவர், செய்தி நிறுவனமான ஏ.என்.ஐயிடம் இத்தகவலை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், சுமார் 50 பெண்களை போராட்டக்காரர்கள், வயல் வெளிக்குள் இழுத்துச் சென்று கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தனர். கார்களில் பயணித்த பெண்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றது. சம்பவ இடத்தில் உள்ளாடைகள் சிதறிக்கிடந்தன என்றார். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலாத்காரம் தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை என்றும், பலாத்கார சம்பவம் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் சோனிபட் மாவட்ட போலீஸ் எஸ்.பி தெரிவித்துள்ளார். இருப்பினும் பெண் போலீஸ் அதிகாரிகள் கொண்ட விசாரணை குழுவை மாநில காவல்துறை அமைத்துள்ளது. அவர்கள் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட உள்ளாடைகளை கைப்பற்றி சோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
திங்கள், 29 பிப்ரவரி, 2016
Home »
» ஜாட் போராட்டத்தின்போது 50க்கும் மேற்பட்ட பெண்கள் கூட்டு பலாத்காரம்? அதிர்ச்சியில் ஹரியானா
ஜாட் போராட்டத்தின்போது 50க்கும் மேற்பட்ட பெண்கள் கூட்டு பலாத்காரம்? அதிர்ச்சியில் ஹரியானா
By Muckanamalaipatti 8:06 AM
Related Posts:
கறுப்பர் கூட்டம்: சொந்தில்வாசனை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு!கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் நிர்வாகி செந்தில் வாசனை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சைபர் கிரைம் காவல்துறைக்கு சென்னை எழும்பூர் நீதிமன்ற… Read More
கொரோனா அச்சுறுத்தல்: மரத்தடியில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடர்!கொரோனா அச்சுறுத்தலால் புதுச்சேரி வரலாற்றில் முதன்முறையாக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மரத்தடியில் அரங்கேறியுள்ளது. தமிழகத்தை தொடர்ந்து புதுச்… Read More
வடகொரியாவுக்குள் நுழைந்த கொரோனா?: ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார் அதிபர் கிம்! வடகொரியாவில் முதல்முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொர… Read More
ஹெர்டு இம்யூனிட்டி நோய்த் தடுப்பாற்றலை உறுதி செய்யுமா?டெல்லியில் சமீபத்தில் நடந்த ஒரு செரோலாஜிகல் ஆய்வில், சோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் சுமார் 23% மாதிரிகளில் கொரோனா வைரஸ்-குறிப்பிட்ட ஆன்டிபாடிகள் இருப்ப… Read More
COVID19 Tamil Nadu … Read More