புதன், 24 பிப்ரவரி, 2016

நிரூபணமாகிவிட்டது

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் இந்தியாவுக்கு எதிராக முழக்கம் எழுப்பவில்லை என்பது நிரூபணமாகிவிட்டது.

மாணவர்கள் போராட்ட வீடியோவில் பாகிஸ்தான் ஆதரவு முழக்கத்தை எடிட் செய்து இணைத்தது ஜி-நியூஸ் இந்தி சேனல்தான் என்பதும் அம்பலமாகிவிட்டது.


பாகிஸ்தானில் சென்று பயங்கரவாதப் பயிற்சி பெற்று வந்தவர்தான் மாணவர் உமர்காலித் என்பதும் பொய்யாகிவிட்டது. அவருக்கு பாஸ்போர்ட்டே இல்லை என்பது தெரியவந்துள்ளது. அவர் பிறப்பால் முஸ்லிம் எனினும், கொள்கையால் தீவிர இடதுசாரி என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

கண்ணைய குமாரை நீதிமன்றத்தில் வைத்து டில்லி போலீஸ் துணையுடன் ஆர்.எஸ்.எஸ் கும்பல் கொடூரமாகத் தாக்கியது அம்பலமாகியுள்ளது. தாக்குதல் நடத்திய வழக்கறிஞரின் வாக்குமூலத்தை ரகசியமாகப் பதிவு செய்து இந்தியா டுடே டிவி வெளியிட்டுள்ளது.

இந்த அப்பாவி மாணவர்களின் பக்கம் நின்றதற்காக டி.ராஜாவின் மகளை சுட்டுக் கொல்ல வேண்டும் என்றார் எச்.ராஜா. இப்போது உண்மைகள் வெளிவந்திருக்கும் நிலையில் எச்.ராஜா தன்னைத் தானே சுட்டுக் கொள்வாரா?

Shal Afridi