சனி, 27 பிப்ரவரி, 2016

Youtube பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

முதல் வெற்றி!
இன்று (26-02-2016) மாலையிலிருந்து இந்து முன்னணியின் Youtube பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
இந்து முன்னணி வெளியிட்ட ஆவணப்படத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மாநில அளவில் DGP ஐ சந்தித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மனுக்கொடுக்கபட்டது.
இதற்கு முன் அனைத்து மாவட்டங்களிலும் S P மற்றும் காவல்துறை ஆணையர்களிடம் மனுக்கொடுக்கபட்டது. திண்டுக்கலில் இதுதொடர்பாக இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலையிலிருந்து இந்து முன்னணியின் Youtube பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இதை நாம் வரவேற்கின்றோம். இது நமது போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.
மேலும் அந்த ஆவணப்படத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறான செய்திகளை பேசிய அனைவரின் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கான முயற்சியை நாம் தொடர்ந்து மேற்கொள்ளும்.
தமிழகத்தில் காவி பயங்கரவாதம் ஒழிக்கப்படும் வரை நமது பாப்புலர் ஃப்ரண்டின் போராட்டம் தொடரும்..