புதன், 24 பிப்ரவரி, 2016

கம்யூனிஸ்ட் தலைவர் டி. ராஜா தன் மகள் அபராஜிதாவை சுட்டுக்கொல்ல வேண்டும்” எச். ராஜாவின் கொல வெறி ஊரிப்போன பேச்சு

கம்யூனிஸ்ட் தலைவர் டி. ராஜா தன் மகள் அபராஜிதாவை சுட்டுக்கொல்ல வேண்டும்” ரத்த தாகம் கொண்ட எச். ராஜாவின் பேச்சு
பாஜகவின் தேசிய செயலாளர் எச்.  ராஜா, சனிக்கிழமை கோவையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “டி. ராஜா உண்மையான தேசபக்தராக இருந்தால் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதற்காக அவர் மகள் அபராஜிதாவை சுட்டுக்கொல்ல வேண்டும். என் மகள் அந்த ஆர்ப்பாட்டத்தில் நின்றிருந்தால் நான் அதைத்தான் செய்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். எச். ராஜாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

ரத்த தாகம் கொண்ட பா. ஜ. க. வின் எச் ராஜா
download (6)
“கம்யூனிஸ்டு டி ராஜா தனது மகளை சுட்டுக் கொல்லச் சொல்ல வேண்டும், யெச்சூரி நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்று பேட்டி கொடுத்திருக்கிறார் பா ஜ க வின் தேசியச் செயலாளர் எச் ராஜா. ஏனிந்தக் கொலைவெறி ? தோழர் டி ராஜாவின் மகள் “இந்தியாவை உடைப்போம்” என்று கோஷம் போட்டாராம்! அத்தகைய மாணவர்களை
யெச்சூரி ஆதரித்தாராம்! இந்திய கம்யூனிஸ்டுகள் நாட்டின் ஒற்றுமையைக் காப்பதில் தங்கள் இன்னுயிரைத் தத்தம் செய்தவர்கள் என்பதை பஞ்சாபின் வரலாறு சொல்லும். பிரிவினைவாத பிந்திரன்வாலா கோஷ்டியை தொடக்கம் முதல் இறுதிவரை எதிர்த்தவர்கள் கம்யூனிஸ்டுகள்தாம் என்பதை நாடறியும். காஷ்மீரிலும் பிரிவினைவாதிகளை  எதிர்த்து போராடி வருகிறவர்கள் அவர்கள்தாம்.
ஆனால் பஞ்சாபிலும் காஷ்மீரிலும் பிரிவினைவாதிகளை மறைமுகமாக ஆதரிக்கும் கட்சிகளோடு பதவிஅரசியல் ஆதாயத்திற்காக உறவு வைத்திருக்கும் கட்சி சாட்சாத் பா ஜ கதான். பாபர் மசூதியை இடித்து இந்திய மக்களின் மனங்களை மதரீதியாகப் பிளக்க முயன்றதும் பாஜ கதான். அந்தக் கட்சியின் தலைவருக்கு தேச ஒருமைப்பாடு பற்றி எங்களுக்கு புத்திசொல்ல எந்த யோக்யதையும் கிடையாது.
தோழர் டி ராஜாவின் மகள் மட்டுமல்ல ஜே என் யூ மாணவர் தலைவர் கன்னய்யா குமாரும் அத்தகைய பிரிவினை கோஷங்களை எழுப்பவில்லை, அதைச் செய்தது சதிகார பா ஜ க மாணவர் பிரிவுதான் எனும் உண்மை இப்போது வெளியாகியிருக்கிறது. அப்படியும் ரத்த தாகம் கொண்டலைகிறார் பா ஜ க தலைவர். அந்தக் கட்சியின் கோரமுகம் வெளிப்பட்டுப் போனது ; தமிழகத்தின் ஜனநாயகக் கட்சிகள் எச்சரிக்கை கொள்ளட்டும்.
அபராஜிதா குறித்து தி டைம்ஸ் தமிழின் பதிவு: தேசவிரோத குற்றவாளியா டி.ராஜாவின் மகள்…?
அபராஜிதாவின் பேச்சு இங்கே:


பெத்தப்புள்ளய சுட்டுக்கொல்லச்சொல்லி அப்பனே கேட்கனும்னு சொல்ற இந்த கொலைவெறியனை நம்பி பக்கத்தில படுத்து தூங்கிறாதீங்க, தலையில கல்லைத் துக்கிப் போட்டு கொன்னுப்புட்டு நாட்டுக்காக செஞ்சேன்னு ரீல் விட்டுருவான். மோசடியாக போலி வீடியோவை பரப்பி நாட்டில் அமைதியின்மையையும் பதற்றத்தையும் உருவாக்கியிருக்குற எச்ச ராஜா கும்பல்தான் நாட்டைவிட்டு ஓடணும் இல்லேன்னா நாண்டுக்கிட்டு சாகணும்.
இந்தக் கொலைவெறியும் ரத்தவெறியும் பீதி உண்டாக்குகிறது. இவர்கள் எல்லாம் மனிதர்கள்தானா? ஒரு மனித உயிர் இவர்களுக்கு அத்தனை துச்சமா? இந்தப் பேச்சைவிட வேதனை அளிப்பது இந்த வெறித்தனத்தை ஆதரிக்கவும் இந்த நாட்டில் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதுதான்.