டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்துள்ளார்.
கிராம சாலைகளில் மத்திய அரசின் ஒத்துழைப்பை எஸ்.பி.வேலுமணி கோரியுள்ளார். மேலும் ஊரக சாலைகள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் அமைக்க ரூ.736 கோடி நிதி தேவை என கோரிக்கை வைத்துள்ளார்.
பல இடங்களில் சாலை பணிகள் முடிவடைந்து ஓராண்டுகளாகியும், நிழற்குடை அமைக்காமல், ஒன்றிய நிர்வாகத்தினர் அலட்சியம் காட்டி வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், பேருந்து நிறுத்தங்களில், நிழற்குடை இல்லாததால், பயணிகள் வெயிலில் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் நிழற்குடை இல்லாததால், பல பகுதியில் ஷேர் ஆட்டோக்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், பயணிகள் பேருந்துகளில் இருந்து இறங்க மற்றும் ஏறுவதற்கு அவதிப்படுகின்றனர்.
இது குறித்து மக்களிடம் கேட்டதிற்கு ‘பேருந்து நிலையம் புதுசா கட்ட போறீங்க? நீங்க என்ன கணக்கு எழுதுவீங்கன்னு எங்களுக்குத்தானே தெரியுமே? மண்ணை போட்டு நாலு ஜல்லி போட்டா பேருந்து நிலையம் அதற்கு 10 கோடி எழுதிடுவீங்க?
முதலில் வாங்குகிற பணத்தை மக்களுக்கு முறையாக சென்றடைய வழியை பாருங்கய்யா? எப்பவுமே உங்க பாக்கெட்டை நிரப்புவதிலேயே குறிக்கோளா இருக்கீங்க?
என்று ஆதங்கத்துடன் தங்களது மன குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.
என்று ஆதங்கத்துடன் தங்களது மன குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.
http://kaalaimalar.in/bus-stand-status-of-tamilnadu/