திங்கள், 22 மே, 2017

குடிநீர் பிரச்சனையை தீர்க்க 9200 கி.மீ. தூரம் வரை பனிப்பாறையை இழுத்து வர திட்டம்! May 22, 2017

குடிநீர் பிரச்சனையை தீர்க்க 9200 கி.மீ. தூரம் வரை பனிப்பாறையை இழுத்து வர திட்டம்!


குடிநீருக்காகப் பனிப்பாறையை 9200 கிமீ தூரம் வரை இழுத்துவர முயற்சிக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!

அடுத்த 15 ஆண்டுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நிலத்தடி நீர் முற்றிலுமாக வறண்டு விடும் அபாயம்! 

குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அண்டார்டிகாவிலிருக்கும் பனிப்பாறையை இழுத்து வர முடிவு!

உலகில் 70 % குடிநீர் அண்டார்டிக்காவில் உள்ளது! 

மேலும் உலகிலேயே தூய்மையான குடிநீர் அண்டார்டிக்காவில் உள்ளது என ஆய்வாளர்கள் தகவல்! 

3 கி.மீ. பரப்பளவுள்ள பனிப்பாறையை பிரத்யேக படகுகள் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸிக்கு இழுத்துவர முடிவு! 

75 ஆயிரம் கோடி லிட்டர் சுத்தமான குடிநீர் கிடைக்க வாய்ப்பு! 

இதனால் சுற்றுச்சுழல் பாதிப்படையும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக அண்டார்டிக்காவிலிருக்கும் பனிப்பாறையை 9200 கி மீ வரை இழுத்து வருவதற்கான அசாத்திய முயற்சியில் ஐக்கிய அரபு நாட்டிலுள்ள ஒரு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் அவர்களது வசதிகளுக்கு ஏற்ப தற்போது நிலவி வரும் குடிநீர் பிரச்சனையைச் சமாளிப்பதற்காக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் இன்னும் 15 ஆண்டுகளில் நிலத்தடி நீர் இல்லாமல் போகும் அபாய நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்த நிலையில் இந்த அசாத்திய முயற்சிக்கு அடிக்கல் நாட்டியுள்ளனர்.

உலகிலுள்ள 70 சதவிகிதத்திற்கு மேலான குடிநீர் அண்டார்டிக்காவில் இருப்பதாகவும், உலகிலேயே தூய்மையான குடிநீர் அண்டார்டிக்காவில் தான் கிடைப்பதாகவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 3 கி.மீ பரப்பளவு கொண்ட பனிப்பாறையை பிரத்தேயக படகுகள் கொண்டு இழுத்து வர முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் இந்நாட்டுக்கு 75 ஆயிரம் கோடி லிட்டர் சுத்தமான குடிநீர் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தச் செயலால் சுற்றுச்சுழல் பெரிது பாதிக்கப்படும் என்றும்., இம்முயற்சி தோல்வியடைவதற்கு தான் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் சுற்றுச்சுழல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.