செவ்வாய், 23 மே, 2017

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் May 23, 2017




பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தீவிரவாத தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்.

பிரிட்டனின் பஞ்சாலைத்தொழில் நகரான மான்செஸ்டரில் அமெரிக்கப் பாடகரான அரியனா கிராண்டின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்திருந்த அந்த அரங்கில் பார்வையாளர்கள் அமர்ந்திருந்த பகுதியில் திடீரெனப் பலத்த சத்தத்துடன் குண்டுவெடித்தது. அப்போது ஒரே நேரத்தில் அரங்கில் இருந்த ரசிகர்கள் அலறியடித்து தப்பிச் செல்ல முயன்றதால், அங்கு கூட்ட நெரிசலும் ஏற்பட்டது.

குண்டுவெடிப்பில் உடல் சிதறியும் நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறியும் 19 பேர் உயிரிழந்ததாகவும், ஐம்பதுக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பிரிட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இது தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கும் எனவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Posts: