திங்கள், 19 ஜூன், 2017

இந்தியாவில் முறையான வடிவமைப்பில்லாத வேகத்தடைகளால் தினமும் 9 பேர் உயிரிழப்பு June 19, 2017

இந்தியாவில் முறையான வடிவமைப்பில்லாத வேகத்தடைகளால் நாளொன்றுக்கு 9 பேர் உயிரிழப்புகள் ஏற்படுவதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

விபத்துக்களை தடுப்பதற்காக அமைக்கப்படும் வேகத்தடைகளே, தற்போது விபத்துக்களுக்கு முக்கிய காரணமாகி வருகின்றன. தரமற்ற கட்டுமானப் பொருட்கள், தவறான வடிவமைப்பு போன்றவைகளே விபத்துக்களுக்கான காரணம் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை கடந்த 2015ம் ஆண்டு வேகத்தடைகளால் ஏற்பட்ட விபத்தில் 3,409 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதே காலகட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் லண்டனில் 2,937 பேர் மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தியாவில் தினமும் வேகத்தடைகளால் 9 பேர் உயிரிழப்பதாகவும், 30 விபத்துக்கள் நிகழ்வதாகவும் சாலை போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Related Posts: