வெள்ளி, 16 ஜூன், 2017

சிரிப்பாய் சிரிக்கும் ஓ.என்.ஜி.சி-யின் உலகத்தரம்!


கதிராமங்கலம் மக்களுக்கு அளித்த பதிலில், ஓ.என்.ஜி.சி-யின் பணி உலகத்தரம் வாய்ந்தது என்று ஓ.என்.ஜி.சி. பீற்றிக்கொண்டிருக்கிறது! உண்மையில் உலகநாடுகளில் உள்ள எரிவாயு-எண்ணெய் நிறுவனங்கள். மக்கள் வாழும் பகுதியில் எரிவாயுக் கிணறுகளை அமைப்பதே இல்லை. ஆனால், ஓ.என்.ஜி.சி. மக்கள் குடியிருப்புகளுக்கு அருகிலும், விளைநிலங்களிலும் குழாய்களைப் பதித்து விவசாயத்தையும், பல்லுயிர்களையும் ஒழித்துக்கட்டிக் கொண்டிருக்கிறது.
ஓ.என்.ஜி.சி-யின் எரிவாயு-எண்ணெய் வளாகங்களில் பலநூறு விபத்துகள் இதுவரை நடந்து விட்டன. கதிராமங்கலத்தில் மட்டுமே இதுவரை நான்கு விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன.
ஓ.என்.ஜி.சி-யின் தரம் அதன் வேலையை நடத்திக்கொண்டிருக்கும் உள்ளூர் காண்டிராக்டர்களின் தரம்தான்! கதிராமங்கலத்தில் நிகழ்ந்த பல விபத்துகளில் ஒன்று பற்றி...