வெள்ளி, 9 ஜூன், 2017

விவசாயிகளை முதல்வர் பழனிசாமி ஏமாற்றிவிட்டதாக அய்யாகண்ணு குற்றச்சாட்டு! June 09, 2017

விவசாயிகளை முதல்வர் பழனிசாமி ஏமாற்றிவிட்டதாக அய்யாகண்ணு குற்றச்சாட்டு!


60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் தருவதாகக் கூறிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டதாக, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு  குற்றம்சாட்டியுள்ளார். 

விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், கூடுதல் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு விவசாயிகளின் தொடர் போராட்டம் இன்று தொடங்கியது. 

தினமும் ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் என 32 நாட்களுக்கு 32 மாவட்ட விவசாயிகள் 
இந்த தொடர் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். முதல் நாளான இன்று கரூர் மாவட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

அப்போது பேசிய  அய்யாக்கண்ணு, டெல்லியில் நடத்திய போராட்டத்தின்போது, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தங்களிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினார்.

Related Posts: