மதுரை மாவட்டம் மேலூரில், வழக்கறிஞர் மீது மர்ம கும்பல் கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் ரவிச்சந்திரன் என்பவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், அவரை ஹாக்கி மட்டை மற்றும் ஆயுதங்களால் கொடூரமாக தாக்கத் தொடங்கினர். இதில் படுகாயமடைந்த வழக்கறிஞர் ரவிச்சந்திரன், நிலைகுலைந்து அங்கே விழுந்தார்.


இந்தக் கொடூரத் தாக்குதல் சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. தனியார் மருத்துவமனையில் வழக்கறிஞர் ரவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாகவே இந்த தாக்குதல் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் ரவிச்சந்திரன் என்பவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், அவரை ஹாக்கி மட்டை மற்றும் ஆயுதங்களால் கொடூரமாக தாக்கத் தொடங்கினர். இதில் படுகாயமடைந்த வழக்கறிஞர் ரவிச்சந்திரன், நிலைகுலைந்து அங்கே விழுந்தார்.


இந்தக் கொடூரத் தாக்குதல் சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. தனியார் மருத்துவமனையில் வழக்கறிஞர் ரவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாகவே இந்த தாக்குதல் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.