சனி, 10 ஜூன், 2017

இந்தியாவில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் நிலை குறித்த ஒரு பார்வை! June 10, 2017

இந்தியாவில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் நிலை குறித்த ஒரு பார்வை!


விவசாயத்தை மட்டுமே பிழைப்பாக நம்பி கிட்டத்தட்ட 65 கோடி பேருக்கு மேல் இருக்கும் இந்தியாவில், கடந்த 6 மாதங்களாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா தொடங்கி தற்போது மத்திய பிரதேசம் வரையில் விவசாயப் போராட்டங்கள் வெடித்து வருகிறது. இந்தியாவில் விவசாயத்தின் நிலை குறித்த தகவலை இனி காணலாம்.

இந்தியாவில் விவசாயத்தின் நிலை:

➤இந்தியாவில் மொத்தம் 24.7 கோடி குடும்பங்கள் உள்ளன.

➤அதில் 16.8  கோடி குடும்பங்கள் கிராமங்களில் வசிக்கின்றன.

➤9.2 கோடி குடும்பங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியே உள்ளன.

➤விவசாயத்தில் கிடைக்கும் வருமானம் 7.8 கோடி குடும்பங்களுக்கு போதுமானதாக இல்லை. 

➤6.2 கோடி விவசாயக் குடும்பங்கள் 2.5 ஏக்கருக்குக் குறைவான நிலமே வைத்துள்ளன.

➤இந்தியாவில் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் நிலங்களின் சராசரி அளவு 4 ஏக்கர்கள்.

➤உலகில் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் நிலங்களின் சராசரி அளவு 14 ஏக்கர்கள். 

➤26% விவசாயிகள் அதிக வட்டிக்குக் கடன் வாங்கித் தவிப்பவர்கள்.

➤விவசாயத்திற்கான காப்பீடு 1% மட்டுமே எடுத்துள்ளனர்.

விவசாயிகளின் முக்கிய பிரச்சனைகள்:

➤விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான தகுந்த சேமிப்பு வசதிகள் இல்லை. 

➤பாசன, மின்சார வசதிகள் சரிவர இல்லை.

➤ஒழுங்கற்ற வகையில் கொடுக்கப்படும் உரங்கள். 

➤சிறு விவசாயிகளுக்கு போக்குவரத்து செலவினால் மேலும் கடன்.

Related Posts: