
தமிழகத்தில் மூன்று மாதத்தில் காய்ச்சல் பாதிப்பால் 12 பேர் உயிரிழந்துள்ளதாக, சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி மற்றும் நாட்றாம்பாளையம் பகுதியில் ஆய்வு செய்த அவர், இறுதியாக ஓசூர் அரசு மருத்துவமனையிலும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில், காய்ச்சல் பாதிப்பால், 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், இதில் மூன்று பேர் டெங்கு பாதிப்பால் இறந்துள்ளனர் என்றும் தெரிவித்தார். கிருஷ்ணகிரி, தருமபுரி, கன்னியாகுமரி உட்பட 10 மாவட்டங்களில் காய்ச்சல் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும், பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி மற்றும் நாட்றாம்பாளையம் பகுதியில் ஆய்வு செய்த அவர், இறுதியாக ஓசூர் அரசு மருத்துவமனையிலும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில், காய்ச்சல் பாதிப்பால், 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், இதில் மூன்று பேர் டெங்கு பாதிப்பால் இறந்துள்ளனர் என்றும் தெரிவித்தார். கிருஷ்ணகிரி, தருமபுரி, கன்னியாகுமரி உட்பட 10 மாவட்டங்களில் காய்ச்சல் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும், பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.