சனி, 1 ஜூலை, 2017

கதிராமங்கலம் மக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு வைகோ கடும் கண்டனம்! July 01, 2017


ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடிய கதிராமங்கலம் மக்கள் மீது தடியடி நடத்தியதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் பதித்த குழாய் உடைந்து, எண்ணெய் கசிவு ஏற்பட்டு, தீப்பற்றி எரிந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

இதனால் ஓஎன்ஜிசி பணிகளை நிறுத்தக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தியது கண்டனத்துக்குரியது என வைகோ தெரிவித்துள்ளார். 

மேலும் தமிழக மக்களின் நியாயமான உணர்வுகளை அலட்சியப்படுத்தி, மக்கள் போராட்டத்தை கிள்ளுக்கீரையாக கருதி, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயல்வதாக குற்றம்சாட்டினார். எனவே, தமிழக அரசு தனது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்க வேண்டும் எனவும், அதைவிடுத்து காவல்துறையை கொண்டு மக்களை மிரட்டுவது சரியான அணுகுமுறை கிடையாது எனவும் குறிப்பிட்டார்.

Related Posts:

  • யோகா மோடி செய்வது யோகா என்றால் ..? உலகில் கறுப்பர் வெள்ளையர் எனஅனைத்து முஸ்லிம்களும் அனுதினமும்ஐவேளையும் கடைபிடிப்பதை தான்மோடி செய்க… Read More
  • ஹெல்மெட் ஹெல்மெட் கட்டாயமாக்கலில் எனக்கு உடன்பாடில்லை. இது மக்களின் உயிர்மேல் அக்கறை கொண்டு ஏற்படுத்தப்பட்ட சட்டமாகத் தெரியவில்லை.அப்படியெனில், 1. தரமான ஹ… Read More
  • நோன்பு வைப்பதர்கு தடை விதித்த சீன அரசுக்கு அல் அஸ்ஹர் இஸ்லாமிய பல்கலைகழகம் கடும் கண்டனம்========================================== உ… Read More
  • நோன்பின் ஸஹர் உணவு. சிரமமின்றி நோன்பைச் சமாளிப்பதற்காக, பின்னிரவில் உட்கொள்ளப்படும் உணவு ஸஹர் உணவு எனப்படுகிறது. ஸஹர் நேரத்தில் இவ்வாறு உணவு உட்கொள்வது கட்ட… Read More
  • திருச்சி டூ ஆஸ்திரேலியா! - பொள்ளாச்சி இளநீருக்கு புதிய வடிவம் கொடுத்த காஜாமுகமது. புதிதாக தொழில் தொடங்குபவர், பாரம்பரியமாக தொழில் செய்பவர் என யாரா… Read More