திங்கள், 10 ஜூலை, 2017

போலீஸ் கண்காணிப்பை மீறி நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட குதிரைப் பந்தயம்! July 10, 2017

போலீஸ் கண்காணிப்பை மீறி நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட குதிரைப் பந்தயம்!


உத்தரபிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் குதிரை பந்தயத்தில் ஈடுபட்ட இருவரை போலீசார் தேடி வருகின்றனர். 

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் கிரேட்டர் நொய்டா சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் வாகன நெரிசல் நிறைந்த பகுதியில் நேற்று இரண்டு நபர்கள் குதிரை பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த ஏராளமானோர் மொபைல் போனில் வீடியோ எடுத்து அதனை வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்துள்ளனர். 

மேலும் இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளன. மிகவும் பரபரப்பு மிகுந்த சாலையில் நடந்த இந்த பந்தயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அந்த இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.