திங்கள், 11 ஏப்ரல், 2016

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் கன்னட நாட்டு சிறுமி


சென்னை தாம்பரம் அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்காக கன்னடநாட்டு சிறுமி இந்திய தேசிய கீதத்தை பாடி அசத்தினார்.

கன்னடநாட்டை சேர்ந்த டாம் கேர்ரீ தம்பதியரின் மகள் கேப்ரீஆலியா , உலகம் முழுவதும் இயங்கி வரும் எஸ்.ஒ.எஸ் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்காக நன்கொடை திரட்டி வருகிறார்.

அவர் பல்வேறு நாடுகளுக்கு சென்று அந்நாட்டு தேசிய கீதத்தை பாடி விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். கேப்ரீஆலியா தற்போது இந்தியா வந்துள்ளார். அவர் சென்னை தாம்பரத்தில் உள்ள எஸ்.ஒ.எஸ் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் தனது குடும்பத்துடன் இந்திய தேசிய கீதத்தை பாடினார்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி திரட்ட 11வயது சிறுமி மேற்கொண்டு வரும் முயற்சி அனைவரின் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.