வியாழன், 14 ஜூலை, 2016

காஷ்மீரின் தற்போதைய நிலவரம் பற்றி உங்கள் கருத்து என்ன?



ஒவைசி: கடந்த 2 அல்லது 3 நாட்களில் 30 பேர் பலியாகியுள்ளனர். மக்கள் பெருமளவில் அன்னியமாகி வருகின்றனர். ஆட்சி நிர்வாகம் இல்லை. முப்தி முகமது சயீத் மறைவிற்குப் பிறகு மீண்டும் அரசாட்சி அமைவதற்கு மாதக்
கணக்காகியுள்ளது. பாஜக ஆட்சியில் இருக்கும் போது அரசமைக்க ஏன் இவ்வளவு காலதாமதம்? அன்னியமாதல் மிகப்பெரிய விஷயம். முப்தி இறந்த பிறகு அவரது இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோரே கலந்து கொண்டனர். அதே நாளில் போராளி ஒருவரின் இறுதிச் சடங்கில் 40,000 பேருக்கும் மேல் கலந்து கொண்டனர். போராளிகள் கொல்லப்படும்போது இறுதிச் சடங்குகளில் பெரிய அளவுக்கு எண்ணிக்கை கூடுகிறது. இது எதனை அறிவுறுத்துகிறது? 

நீங்கள் கூறவருவது என்ன? 

மக்களுக்கும் அரசுக்கும் தொடர்பு பெரிய அளவில் துண்டிக்கப்பட்டுள்ளதை இது காட்டுகிறது. அன்னியமாதல். இது நல்ல நிலைமையல்ல. 

எம்.ஐ.எம். கட்சி அன்னியமாதல் விஷயத்தை கையிலெடுக்குமா? 

ஆட்சியில் இருக்கும் கட்சி முன்னுரிமை அளிக்க வேண்டிய விஷயம். 
அசதுத்தீன் உவைஸி
தமிழ் ஹிந்து நாளிதழ்.