வியாழன், 25 மே, 2017

இந்திய ராணுவம் செய்த போலி என்கவுன்டர் : உண்மையை அம்பலப்படுத்திய உயரதிகாரி..,

இந்திய ராணுவம் செய்த போலி என்கவுன்டர் குறித்த உண்மையை உயரதிகாரி ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் இந்திய ராணுவம், சிஆர்பிஎப் மற்றும் போலீஸார் ஆகியோர் தீவிரவாதிகளுக்கு எதிராக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மார்ச் 30-ந் தேதி தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த இருவரை இந்திய ராணுவம் என்கவுன்டரில் சுட்டுக் கொண்றது.
இந்த என்கவுன்டர் குறித்து டெல்லியில் உள்ள சிஆர்பிஎப் தலைமயகத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அறிக்கையை ஆய்வு செய்த சிஆர்பிஎப் ஐஜி ரஜினீஸ் ராய், பல்வேறு முரண்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி டி கல்லிங் என்ற கிராமத்தினர் இருவரை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர்.
பின்னர் அவர்களை சுட்டுக்கொன்றுவிட்டு, அருகில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்துள்ளனர். இதனை அந்த கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுவனும், ஒரு பெண்ணும் பார்த்துள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம், சிஆர்பிஎப் மற்றும் போலீஸார் ஆகியோர் போலி என்கவுன்டரில் ஈடுபட்டிருப்பதும் அதனை உயரதிகாரி ஒருவரே அம்பலப்படுத்தியிருப்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
http://kaalaimalar.in/fake-encounter-by-indian-army/

Related Posts:

  • IPC - INDIAN PENAL CODE 1860 SECTION 100(2)...  "இந்திய தண்டனை சட்டம் 1860 " பிரிவு 100(2) ‘‘ஒருவரின் செயலால், நமக்கு கொடுங்காயம் ஏற்படலாம் எ… Read More
  • TYPES OF PATTA : பட்டா வகைகள் TYPES OF PATTA : பட்டா வகைகள் 1.NATHAM PATTA : நத்தம் பட்டா . 2.RYOTVARI PATTA : ரயத்துவரி பட்டா 3.2-C PATTA -2-C பட்டா ., NATHAM PATTA : Th… Read More
  • விவசாயத் தோழர்களே விழித்துக்கொள்ளுங்கள்... நேற்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளில் ஒரு மிக முக்கிய செய்தி வெளியாகியிருந்தது. எத்தனை பேர் அதனை வாசித்தார்கள், எத்தனை பேர் கண்களில் அது… Read More
  • போபால் படுகொலையை கண்டித்து போபால் படுகொலையை கண்டித்து நாங்கள் முஸ்லிம் மாணவர்கள், எங்களையும் சுட்டுத் தள்ளு என்று கேரள மாநில மாணவர் அமைப்பான SIO போராட்டம் நடத்தியுள்ளது. தமுமு… Read More
  • அரசியல் சாசனம் 41வது பிரிவு, அரசியல் சாசனம் 343 (1) அரசியல் சாசனம் 41வது பிரிவு அனைவருக்கும் வேலை வாய்ப்பு தரப்பட வேண்டும்; சக்திக்கு மீறிய வேலையாக அது இருக்கக் கூடாது; வேலையில்லாதோருக்கும் ம… Read More