வியாழன், 25 மே, 2017

உ.பி. முதல்வர் ஆதித்யநாத், துணை முதல்வருக்கு நோட்டீஸ் – அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி…!


நாடாளுமன்ற எம்.பி. பதவியை ராஜினாமா செய்யாமல் உத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத்தும், துணை முதல்வர் பதவியில் கேசவ் பிரசாத்மவுரியாவும் தொடர்கிறார்கள்.
இவர்களை பதவிநீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கக் கோரி உத்தரப்பிரதேச அரசுக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ்அனுப்ப அலகாபாத் உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது
கோரக்பூர் தொகுதி எம்.பியாக யோகி ஆதித்யநாத்தும்,  புல்பூர் தொகுதி எம்.பி.யாககேசவ் பிரசாத் மவுரியாவும் இருக்கிறார்கள்.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் மாநிலத்தில் அமைச்சர் பதவி வகிக்க முடியாது என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆதலால், ஆதித்யநாத், கேசவ் பிரசாத் ஆகியோர் எம்.பி.பதவியை பறிக்க வேண்டும் என்று  கோரி ஆலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சஞ்சய் சர்மா என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்து.
அந்த மனு  நீதிபதிகள் சுதிர் அகர்வால், வீரேந்திர குமார் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பி அவர்களின் பதிலை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
முன்னதாக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், உ.பி. அரசின் கூடுதல் சொலிசிட்டர்ஜெனரல் அசோக் மேத்தா, வழக்கறிஞர் ராகேந்திர சிங் ஆகியோரே நேற்று நேரில் ஆஜராக லக்னோ அமர்வு  உத்தரவிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://kaalaimalar.in/up-chief-cm-allahabad-govt-notices/

Related Posts: