வெள்ளி, 26 மே, 2017

பெட்ரோல் விலை குறையும்: டோனி செபா கணிப்பு May 26, 2017

அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோலின் விலை வெகுவாக குறையும் என்று அமெரிக்காவிலுள்ள டோனி செபா என்ற ஆய்வாளர் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சூரிய ஆற்றலின் மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் விலை கிட்டத்தட்ட 10 மடங்கு குறையும் என்று முன்கூட்டியே கணித்தவரும் இதே டோனி செபாதான்.

பெட்ரோல் விலை ரூ.30 ஆக குறைய வாய்ப்பு என சொல்லும் காரணங்கள்..

➤அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோலின் விலை லிட்டர் 30 ரூபாயாக குறைய வாய்ப்பு
 
➤தானியங்கி கார்கள் தயாரிப்பு அதிகரித்து வருவதால் பெட்ரோலின் விலை கணிசமாக குறையும் 

➤அனைத்து கார் நிறுவனங்களும் தற்போது தானியங்கி கார்களை பரிசோதித்து வருகின்றன

➤மின்சாரத்தால் இயங்கும் கார்கள் தயாரிப்பு அதிகரிப்பதாலும் பெட்ரோல்,டீசல் கார்கள் உபயோகம் குறையும் 

➤2030ல் இந்தியா முழுவதும் மின்சாரத்தால் இயங்கும் கார்கள் மட்டுமே இருக்கும் என மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தகவல்

➤கச்சா எண்ணெய் விற்கும் அரபு நாடுகளின் செல்வாக்கு மற்றும் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் எனவும் கணிப்பு

Related Posts: