தங்கம் மற்றும் தங்க நகைகளுக்கு 3 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று இதனை தெரிவித்த அருண்ஜெட்லி, பட்டை தீட்டப்படாத வைரத்திற்கு 0.25 சதவீத வரி விதிக்கப்படும் என்றார்.பட்டு மற்றும் சணலுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கப்படும் என குறிப்பிட்ட அவர், பருத்தி மற்றும் இயற்கை நாருக்கு 5 சதவீத வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆயிரம் ரூபாய்க்கு குறைவான விலையுள்ள ஆயத்த ஆடைகளுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படும் என்றும்,பீடிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், 500 ரூபாய்க்கு குறைவான காலணிகளுக்கு 5 சதவீதமும், 500 ரூபாய்க்கு மேல் உள்ள காலணிகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரியும்,அடைக்கப்பட்ட உணவு வகைகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் அருண்ஜெட்லி மேலும் தெரிவித்தார்.
டெல்லியில் நேற்று இதனை தெரிவித்த அருண்ஜெட்லி, பட்டை தீட்டப்படாத வைரத்திற்கு 0.25 சதவீத வரி விதிக்கப்படும் என்றார்.பட்டு மற்றும் சணலுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கப்படும் என குறிப்பிட்ட அவர், பருத்தி மற்றும் இயற்கை நாருக்கு 5 சதவீத வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆயிரம் ரூபாய்க்கு குறைவான விலையுள்ள ஆயத்த ஆடைகளுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படும் என்றும்,பீடிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், 500 ரூபாய்க்கு குறைவான காலணிகளுக்கு 5 சதவீதமும், 500 ரூபாய்க்கு மேல் உள்ள காலணிகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரியும்,அடைக்கப்பட்ட உணவு வகைகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் அருண்ஜெட்லி மேலும் தெரிவித்தார்.