வரி செலுத்தாவிட்டால் கைது நடவடிக்கை பாயும் என சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரிச்சட்ட முன்வடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்ட முன்வடிவை மாநில வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தாக்கல் செய்தார். சுமார் 280 பக்கங்கள் கொண்ட அந்த சட்டமுன்வடிவில், தமிழக அரசு அறிவிக்கை மூலமாக தெரிவிக்கும் தேதியில் இருந்து, தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம் மாநிலம் முழுவதும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சரக்கு மற்றும் சேவை ஆகியவற்றின் உற்பத்தி அல்லது இறக்குமதி தொடங்கி, சில்லரை விற்பனை வரை ஒவ்வொரு நிலையிலும் வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சரக்குகள் மற்றும் சேவை வழங்கல் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரி இனி ஒருமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை மீறுவோருக்கு விதிக்கும் தண்டனைகளை வகை செய்தல் மற்றும் வரி செலுத்துவோரை ஜிஎஸ்டி வரிக்கு ஏதுவாக சீராக மாற்றம் செய்வதற்கும் வழிவகை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், பல்வேறு சிறப்பு அம்சங்களை முன்வைத்து, தமிழ்நாடு ஜிஎஸ்டி வரிச் சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்படுவதாகவும் அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
தமிழக சட்டசபையில் தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்ட முன்வடிவை மாநில வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தாக்கல் செய்தார். சுமார் 280 பக்கங்கள் கொண்ட அந்த சட்டமுன்வடிவில், தமிழக அரசு அறிவிக்கை மூலமாக தெரிவிக்கும் தேதியில் இருந்து, தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம் மாநிலம் முழுவதும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சரக்கு மற்றும் சேவை ஆகியவற்றின் உற்பத்தி அல்லது இறக்குமதி தொடங்கி, சில்லரை விற்பனை வரை ஒவ்வொரு நிலையிலும் வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சரக்குகள் மற்றும் சேவை வழங்கல் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரி இனி ஒருமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை மீறுவோருக்கு விதிக்கும் தண்டனைகளை வகை செய்தல் மற்றும் வரி செலுத்துவோரை ஜிஎஸ்டி வரிக்கு ஏதுவாக சீராக மாற்றம் செய்வதற்கும் வழிவகை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், பல்வேறு சிறப்பு அம்சங்களை முன்வைத்து, தமிழ்நாடு ஜிஎஸ்டி வரிச் சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்படுவதாகவும் அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.