ஞாயிறு, 4 ஜூன், 2017

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் கட்டண விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவு June 04, 2017

நாடு முழுவதும் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் கட்டண விவரங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

பெரும்பாலும் நகரங்களில் செயல்பட்டு வந்த சிபிஎஸ்இ பள்ளிகள் மீதான ஆர்வம் பொதுமக்களிடையே அதிகரித்துள்ள நிலையில், தற்போது நாடு முழுவதும் கிராமங்களிலும் சிபிஎஸ்இ பள்ளிகள் அதிகளவில் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் தேவையில்லாத காரணங்களை கூறி பெருமளவு பணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. 

இதையடுத்து, கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் கட்டண விவரங்களை சமர்ப்பிக்குமாறு சிபிஎஸ்இ அமைப்பு கேட்டுள்ளது. எனினும், இந்த விவரங்களை சமர்ப்பிப்பதற்கு கால அளவு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மேலும், மறைமுக கட்டணங்களின்றி முறையாக கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ எச்சரித்துள்ளது.