
பாலில் கலப்படம் உள்ளதா என்பதை கண்டறிய நடமாடும் இயந்திரம் மூலம் மாவட்ட வாரியாக ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை திட்டமிட்டுள்ளதாக, உணவு பாதுகாப்பு துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பாலில் கலப்படம் உள்ளதா? என்பதை கண்டறிவதற்கான நடமாடும் இயந்திரம் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. கடந்த 6 மாத காலமாக தமிழகத்தில் பால் கலப்படம் உள்ளதா? என உணவு பாதுகாப்புத் துறை மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மதுரையில் மக்களிடம் இருந்து மாதிரிகள் பெற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
பாலில் கலப்படம் உள்ளதாக சமீபகாலங்களாக வந்த செய்திகளால் அதிக அளவில் மக்கள் தங்கள் வாங்கும் பால் மாரிதிகளை இந்த இயந்திரம் மூலம் பரிசோதித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது உள்ளது இந்த இயந்திரம் பரிசோதனை முறையில் ஒன்றே ஒன்று தான் தமிழகத்தில் உள்ளது, மதுரை தவிர பிற மாவட்டங்களிலும் பாலை பரிசோதிக்க இயந்திரங்கள் தேவை என மாவட்ட ஆட்சியர்கள் கோரியுள்ளனர்.
வாரம் ஒரு மாவட்டம் என திட்டமிட்டு, மக்கள் தாங்கள் வாங்கும் பாலை பரிசோதிக்க அட்டவணையை உணவு பாதுகாப்பு துறை தயாரிக்க உள்ளது. கடந்த நவம்பர் மாதம் பரிசோதித்த 106 மாதிரிகளில் இரண்டு மாதிரிகளில் டிடர்ஜெண்ட் மற்றும் நியூட்ரலைஸ்ர் கலந்துள்ளது கண்டறியப்பட்டு, அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த இயந்திரம் மூலம் பரிசோதித்ததும், ஆய்வு கூடத்தில் பரிசோதித்த முடிவுகளும் ஒரே மாதிரியான உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கலப்படம் தொடர்பாக தனியார் பால்கள் புனே ஆய்வுக்கூடம் மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு கூடங்களுக்கும் அனுப்பட்டுள்ளது, சோதனை முடிவுகள் விரைவில் வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாலில் கலப்படம் உள்ளதா? என்பதை கண்டறிவதற்கான நடமாடும் இயந்திரம் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. கடந்த 6 மாத காலமாக தமிழகத்தில் பால் கலப்படம் உள்ளதா? என உணவு பாதுகாப்புத் துறை மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மதுரையில் மக்களிடம் இருந்து மாதிரிகள் பெற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
பாலில் கலப்படம் உள்ளதாக சமீபகாலங்களாக வந்த செய்திகளால் அதிக அளவில் மக்கள் தங்கள் வாங்கும் பால் மாரிதிகளை இந்த இயந்திரம் மூலம் பரிசோதித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது உள்ளது இந்த இயந்திரம் பரிசோதனை முறையில் ஒன்றே ஒன்று தான் தமிழகத்தில் உள்ளது, மதுரை தவிர பிற மாவட்டங்களிலும் பாலை பரிசோதிக்க இயந்திரங்கள் தேவை என மாவட்ட ஆட்சியர்கள் கோரியுள்ளனர்.
வாரம் ஒரு மாவட்டம் என திட்டமிட்டு, மக்கள் தாங்கள் வாங்கும் பாலை பரிசோதிக்க அட்டவணையை உணவு பாதுகாப்பு துறை தயாரிக்க உள்ளது. கடந்த நவம்பர் மாதம் பரிசோதித்த 106 மாதிரிகளில் இரண்டு மாதிரிகளில் டிடர்ஜெண்ட் மற்றும் நியூட்ரலைஸ்ர் கலந்துள்ளது கண்டறியப்பட்டு, அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த இயந்திரம் மூலம் பரிசோதித்ததும், ஆய்வு கூடத்தில் பரிசோதித்த முடிவுகளும் ஒரே மாதிரியான உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கலப்படம் தொடர்பாக தனியார் பால்கள் புனே ஆய்வுக்கூடம் மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு கூடங்களுக்கும் அனுப்பட்டுள்ளது, சோதனை முடிவுகள் விரைவில் வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.