அதிமுக அம்மா அணியில் டிடிவி தினகரனை தான் முன்னிலைப்படுத்த வேண்டும் என முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்த அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை நேற்று சந்தித்துப் பேசினர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், கட்சியில் தினகரனை முன்னிலைப்படுத்தினால் மட்டுமே குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவளிக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தினகரன் தலைமையில் தான் நடத்த வேண்டும் என்றும், அதிமுக அம்மா அணியின் இப்தார் நோன்பு விழாவும் தினகரன் தலைமையிலேயே நடைபெற வேண்டும் என்றும், அவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது.
டி.டி.வி.தினகரன் பெங்களூரு சிறையில் உள்ள சுதாகரனை சந்தித்துப் பேசச் சென்ற நிலையில், தற்போது இந்த நிபந்தனை அவரது ஆதரவு எம்எல்ஏக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றும் சட்டப்பேரவை முடிந்தவுடன் முதல்வரை சந்திக்க தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர். அதேபோல் அதிமுகவின் தோழமை கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தனியரசு, கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரியும் இன்று முதல்வரை சந்திக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை நேற்று சந்தித்துப் பேசினர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், கட்சியில் தினகரனை முன்னிலைப்படுத்தினால் மட்டுமே குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவளிக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தினகரன் தலைமையில் தான் நடத்த வேண்டும் என்றும், அதிமுக அம்மா அணியின் இப்தார் நோன்பு விழாவும் தினகரன் தலைமையிலேயே நடைபெற வேண்டும் என்றும், அவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது.
டி.டி.வி.தினகரன் பெங்களூரு சிறையில் உள்ள சுதாகரனை சந்தித்துப் பேசச் சென்ற நிலையில், தற்போது இந்த நிபந்தனை அவரது ஆதரவு எம்எல்ஏக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றும் சட்டப்பேரவை முடிந்தவுடன் முதல்வரை சந்திக்க தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர். அதேபோல் அதிமுகவின் தோழமை கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தனியரசு, கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரியும் இன்று முதல்வரை சந்திக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.