வியாழன், 22 ஜூன், 2017

ஆசிரியர்கள் இல்லாததால் மூடப்பட்ட அரசுப்பள்ளி வகுப்புகள்! June 22, 2017

ஆசிரியர்கள் இல்லாததால் மூடப்பட்ட அரசுப்பள்ளி வகுப்புகள்!


திருப்பதியில் 48 ஆண்டுகளாக இயங்கி வரும் தமிழ் வழிப் பள்ளிக்குப் புதிதாக ஆசிரியர் நியமிக்கப்படாததால் அந்தப் பள்ளியை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி லட்சுமிபுரம் கென்னடி நகரில் 1969ஆம் ஆண்டு தமிழ் ஆர்வலர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் 7ஆம் வகுப்பு வரையுள்ள தமிழ்ப் பள்ளியைத் தொடங்கினர். பின்னர் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இந்தப் பள்ளிக்குப் புதிதாக ஆசிரியர்களை நியமிக்காததால் இந்த ஆண்டு 8, 9, 10ஆம் வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏழாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் 9 பேருக்கு இந்தப் பள்ளியிலேயே தொடர்ந்து படிக்க ஆர்வமிருந்தும் ஆசிரியர் இல்லாததால் மாற்றுச் சான்றிதழ் பெற்று வேறு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். கடந்த காலங்களில் முந்நூறு மாணவர்கள் வரை படித்து வந்த இந்தத் தமிழ்வழிப் பள்ளியில் இப்போது 38 பேர் மட்டுமே படித்து வருகின்றனர். இதே நிலை நீடித்தால் விரைவில் இந்தப் பள்ளியை மூடும் நிலை ஏற்படும் என்று திருப்பதி தமிழ் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  

மூன்றாண்டுகளுக்கு முன்பு நாடார் சங்கத்தினர் இந்தப் பள்ளிக்கு ஒரு ஆசிரியரை நியமித்துள்ளனர். மாநகராட்சி சார்பில் மாணவர்களுக்குப் புத்தகம், சீருடை, சத்துணவு ஆகியவை வழக்கம் போல் வழங்கப்படுகிறது. காலியாகும் இடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிக்காமல் ஆந்திர அரசு புறக்கணித்து வருதாக புகார் எழுந்துள்ளது.   

கிருஷ்ணகிரி, திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் தெலுங்கு பேசும் மக்களுக்காக நூற்றுக்கு மேற்பட்ட பள்ளிகளை தமிழக அரசு நடத்தி வருகிறது. எனவே  திருப்பதியில் வாழும் தமிழர்களின் பிள்ளைகள் தமிழில் பாடம் படிக்க ஆசிரியரைப் பணியமர்த்த ஆந்திர அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் திருப்பதி வாழ் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts:

  • கற்றாழை கற்றாழை ஜெல்லை மோரில் கலந்து குடிப்பதன் மூலம் மஞ்சள் காமாலை கட்டுப்படும். ரத்த அழுத்தம் சீராகும். பித்தம் தணிந்து உஷ்ணம் குறையும். உடலுக்கு நல்ல எதிர… Read More
  • வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி! அதிகளவு பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப்பினை சில வகையான கைப்பேசிகளில் பயன்படுத்த எதிர்காலத்தில் பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வலைப்பூவின்… Read More
  • விதி பற்றி (function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src … Read More
  • இரவில் தூக்கம் வரவில்லையா?: உங்களுக்கான டிப்ஸ்.. கடுமையான வேலைப்பளு, மன அழுத்தம், ஓய்வே இல்லாமல் அலைச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், நன்றாக தூங்க வேண்டும் என ஆசைப்படுவர். இதனால் இரவு … Read More
  • அவலம்.. தீவிர மதவாதம் மற்றும் சிறுபான்மை, தலித்ததுகளுக்கு எதிரான வன்முறையோடு தொடர்புடைய இயக்கமாகக் கருதப்படுவதால் இந்து முன்னணி மற்றும் இந்துத்வா சார்புடைய … Read More