புதன், 12 ஜூலை, 2017

இந்தியாவின் நவீன பொருளாதார அடிமைத்தனம் பற்றி மோடியிடம் பேசினேன்: பிரிட்டன் பிரதமர் July 12, 2017





கடந்த வாரம் ஜெர்மனில் ஜி-20 மாநாடுகளின் கூட்டமைப்பு நடந்தது. இந்த கூட்டமைப்பில் கலந்துகொண்ட பிரிட்டன் பிரதமர் தெரசா மே மற்றும் இந்திய பிரதமர் மோடியும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, பிரிட்டனில் விஜய் மல்லையா, லலித் மோடி போன்ற இந்திய பொருளாதார குற்றவாளிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் தெரசா மே பிரதமர் மோடியிடம் தான் வலியுறுத்திய விஷயங்கள் குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது, இந்தியாவில் நிலவும் நவீன பொருளாதார அடிமைத்தனம் பற்றி இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரசா மே தெரிவித்துள்ளார். மேலும், ஐரோப்பிய குழுமத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரிக்ஸ்ட் நடவடிக்கைக்கு பிறகு, பொருளாதார உறவுகளை வலுப்படுத்த விரும்பும் நாடுகளில் இந்தியா முக்கியமானது என்றும் தெரசா மே குறிப்பிட்டுள்ளார்.