
நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களம் இறங்கிய மீராகுமாரைவிட 3 லட்சத்து 34 ஆயிரத்து 730 வாக்குகள் அதிகம் பெற்று ராம்நாத் கோவிந்த வெற்றி பெற்றுள்ளார்.
13வது குடியரசுத் தலைவராக பதவி வகித்து வரும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 24ந்தேதியோடு நிறைவடைகிறது. இதையடுத்து நாட்டின் 14வது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 17ந்தேதி நடைபெற்றது. அனைத்து மாநிலங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தேர்தலில் வாக்குகள் பதிவு செய்தனர்.
நாடெங்கிலும் 32 இடங்களில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் டெல்லியில் இன்று எண்ணப்பட்டன. இதில் மொத்தம் பதிவான வாக்குகளில் 65.65 சதவீத வாக்குகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் பெற்றார்.
அவரை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகக் களம் இறங்கிய மீராகுமாருக்கு 34.35 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதாவது ராம்நாத் கோவிந்திற்கு 7 லட்சத்து 2 ஆயிரத்து 44 மதிப்புடைய 2 ஆயிரத்து 930 வாக்குகள் கிடைத்தன.
மீராகுமாருக்கு 3 லட்சத்து 67 ஆயிரத்து 314 மதிப்புடைய 1,844 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதை குடியரசுத் தேர்தலை நடத்தும் அதிகாரியாகச் செயல்பட்ட மக்களவைச் செயலாளர் அனூப் மிஸ்ரா அறிவித்தார்.
13வது குடியரசுத் தலைவராக பதவி வகித்து வரும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 24ந்தேதியோடு நிறைவடைகிறது. இதையடுத்து நாட்டின் 14வது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 17ந்தேதி நடைபெற்றது. அனைத்து மாநிலங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தேர்தலில் வாக்குகள் பதிவு செய்தனர்.
நாடெங்கிலும் 32 இடங்களில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் டெல்லியில் இன்று எண்ணப்பட்டன. இதில் மொத்தம் பதிவான வாக்குகளில் 65.65 சதவீத வாக்குகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் பெற்றார்.
அவரை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகக் களம் இறங்கிய மீராகுமாருக்கு 34.35 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதாவது ராம்நாத் கோவிந்திற்கு 7 லட்சத்து 2 ஆயிரத்து 44 மதிப்புடைய 2 ஆயிரத்து 930 வாக்குகள் கிடைத்தன.
மீராகுமாருக்கு 3 லட்சத்து 67 ஆயிரத்து 314 மதிப்புடைய 1,844 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதை குடியரசுத் தேர்தலை நடத்தும் அதிகாரியாகச் செயல்பட்ட மக்களவைச் செயலாளர் அனூப் மிஸ்ரா அறிவித்தார்.