சனி, 30 டிசம்பர், 2023

10 மாவட்டங்கள் புயல், வெள்ளம் பாதித்த மாவட்டங்களாக அறிவிப்பு- அரசாணை வெளியீடு

 30 12 2023 

Chennai

Tamil nadu

சென்னைகாஞ்சிபுரம்திருவள்ளூர்செங்கல்பட்டு புயல் பாதித்த மாவட்டங்களாகவும்நெல்லைதூத்துக்குடிகன்னியாகுமாரிதென்காசிராமநாதபுரம்விருதுநகர் வெள்ளம் பாதித்த மாவட்டங்களாகவும் அறிவித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த 3, 4 ஆம் தேதிகளில் சென்னைகாஞ்சிபுரம்திருவள்ளூர்செங்கல்பட்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இதனால்பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.

அதேபோல் குமரிக்கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலிதூத்துக்குடிகன்னியாகுமரிதென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 16 ஆம் தேதி இரவு முதல் 18 ஆம் தேதி பகல் வரை இடைவிடாத மழை பெய்தது.

தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக திருநெல்வேலிதூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆறுகளின் கரையோரம் இருக்கும் அனைத்து ஊர்களையும் வெள்ளம் சூழ்ந்தது. உயிர்ச்சேதம்சொத்துகள் சேதம்பொருட்சேதம்பயிர்ச்சேதம்கால்நடைகள் சேதம்என பல வகைகளிலும் இந்த 2 மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல கிராமங்களில் நெல்வாழை போன்ற விளைநிலங்கள் முற்றிலும் சேதமானதால் விவசாயிகள் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்வருவாய் நிர்வாக ஆணையரின் கோரிக்கையை ஏற்றுசென்னைதிருவள்ளூர்செங்கல்பட்டுகாஞ்சிபுரம் மாவட்டங்களைபுயல் பாதிப்பு மாவட்டங்களாகவும்திருநெல்வேலிதுாத்துக்குடிகன்னியாகுமரிதென்காசிராமநாதபுரம்விருதுநகர் மாவட்டங்களைவெள்ள பாதிப்பு மாவட்டங்களாகவும் அரசு அறிவித்துள்ளது.

இதற்கான அரசாணையைவருவாய்துறை செயலர் ராஜாராமன் வெளியிட்டுள்ளார்.

floods

முன்னதாக தமிழக வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

ஆனால்தமிழக மழைவெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான், 10 மாவட்டங்களை புயல்வெள்ளம் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-floods-10-districts-affected-by-storm-and-floods-2057531