திங்கள், 26 பிப்ரவரி, 2024

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், முதலீட்டாளர்களுக்கு சென்னையில் இட வசதி: தொடங்கி வைத்த உதயநிதி

 தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் ’சென்னை புத்தொழில் மைய அலுவலகத்தை  சென்னை நந்தனம் சி.எம்.ஆர்.எல் வளாகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தார்.

புத்தொழில் நிறுவனங்களுக்கு பயிற்சிகள் வழங்க அரங்கம், தொலைபேசி சேவை மையம், கலந்துரையாடல் அரங்கங்கள், முதலீட்டாளர்களை சந்திக்க தனி அறைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிமாவட்டங்களில் செயல்படும் புத்தொழில் நிறுவனங்களை சார்ந்தவர்கள், சென்னைக்கு வரும்போது பணிபுரியும் இடம் வழங்குவதற்கான வசதிகளும் இதில் உருவாக்கப்பட்டுள்ளன.

 இந்நிகழ்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், அத்துறையின் செயலர் அர்ச்சனா பட்நாயக், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/startuptn-chennai-hub-was-inaugurated-by-udhayanidhi-stalin-minister-for-youth-welfare-and-sports-development-4002857