செவ்வாய், 8 செப்டம்பர், 2015

12 ஆண்டுகள் நீரில்லாமல் வாழும் எருக்கின் பயன்


தெய்வீக மூலிகை எனப் போற்றப்படும், எருக்கு வளமற்ற நிலங்கள், பராமரிக்கப்படாத வயல்கள், சாலையோரங்கள் எங்கும் வளரும் 12ஆண்டுகள் மழையே இல்லாவிட்டாலும் கூட உயிர் வாழும் ஆற்றல் கொண்டது அகன்;ற எதிரடுக்கில் அமைந்த இலைகளைக் கொண்டு நேராக வளரும் பாலுள்ள குத்துச்செடி ஒழுங்கற்ற அரைக்கோள வடிவில் உள்ள இதன் காய்கள் வெடித்து காற்றில் பறக்கும்போது விதைகள் அனைத்து பரவி முளைத்து செடியாக இருக்கும்
இதன் சிறப்பு
விநாயகர் சதுர்த்தி அன்று மிக மிக முக்கியமாக கருதப்படும்.
நெல்வயலுக்கு உரமாக பயன்படுகிறது இதனை வெட்டி தண்ணீர் தேங்கி இருக்கும் இடத்தில் போட்டால் அந்த இடத்தில் களைகள் வராது. சாறுஉறிஞ்சும் பூச்சியின் தாக்குதல் இருக்காது தாவர இலைச்சாறு தயாரித்து செடிகளுக்கு தெளித்தால் பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது தற்சமையம் மழை பெய்து ஆங்காங்கே தண்ணீர் வயலில் நின்றுகொண்டிருக்கிறது நம்முடைய வயில் ஓரத்தில் உள்ள வரப்பில் நிறைய எருக்கு காணப்படும்;. அவற்றை நாம் வயில் வெட்டிபோட்டு உழவு செய்யலாம் இயற்கை எரு நமக்கு கிடைக்கும்
பலவிதமான நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.
எருக்கம் பால் கட்டிகளையே கரைக்கும். முள் குத்தியஉடன் இதன் பிசின் பால் வைத்தால் அடுத்தநாள் முள் வெளியே வந்துவிடும்.
காதுவலி உள்ளவர்கள் எருக்கின் பழுத்த இலையை விளக்கில் வாட்டி லேசான சூட்டில் இரண்டு சொட்டு காதில் விட காதுவலி பறந்துபோகும். எருக்கு இருந்தால் பேய் வராது என்பார்கள் இதனுடைய நாரில் கயிறு திரித்து கைகளில் கட்டிக்கொள்வார்கள் வீடுகளிலும் வெள்ள எருக்கம் வேரை வைத்திருப்பார்கள்.
எருக்கின் இலை, பூ, பட்டை, வேர் அனைத்திலும் மருத்தவக் குணங்கள் கொண்டவை இதனால்தான் ஏழைக்கு வைத்தியம் எருக்கு என்று கூறுவார்கள்

Related Posts:

  • நீ ஒரு தேச துரோகி. லலித் மோடி தப்பி ஓட்டம். விஜய் மல்லையா தப்பி ஓட்டம் கச்சா எண்ணை குறைந்தும் அம்பானிகளுக்காக பெட்ரோல் டீசல் விலை குறையாமை. அதானிக்காக இந்தியன் வங்… Read More
  • அணு உலை கசிவு: குஜராத் அணுமின் நிலையம் தற்காலிக மூடல் குஜராத்தின் காக்ரபார் அணுமின் நிலையத்தின் முதல் அணுஉலை இயந்திரக் கோளாறு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது‌. முதல் அணுஉலையில் உள்ள குளிர்விப்பானில… Read More
  • மலச்சிக்கல் ஏற்படுவது ஏன்? காலையில் எழுந்ததும் மலம் போகாவிட்டால், பலருக்கு அந்த நாள் முழுவதும் எந்த வேலையும் ஓடாது. வெறும் வயிற்றில் லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிப்பார்கள்.… Read More
  • நாள் தோறும் நாம் ஊழைத்து தேடி பெற்றுச் செலவு செய்யும் இந்த ரூபாய் நோட்டுக்களுக்கும், நாணயங்களுக்கும் உள்ள மதிப்பை நாம் அறிவோம். ஆனால், இந்திய ரூபாயி… Read More
  • தொழுகை திருடர்கள் ஜாக்கிரதை! கின்னஸில் இடம்பிடிக்க அல்ல தொழுகை; சொர்க்கத்தில் இடம் பிடிக்கவே தொழுகை! தொழுகையில் நிதானத்தை கடைபிடிப்போம்! நாம் இருக்கும் மாதம் சங்கை மிகு … Read More