செவ்வாய், 22 டிசம்பர், 2015

பள்ளிவாசல்களில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அழைக்காதீர்கள் என அல்லாஹ்வின் தெளிவான வழிகாட்டலும்.

நான் இப்பொழுது ஊரில் இருக்கிறேன்.இது மார்கழி மாதமாகாயால் இந்து சகோதரர்களுக்கு பக்தி பரவசமிக்கமாதம் .காலையில் நான் பஜ்ரு(சுபுஹ்)தொழுக்காக எழுந்திருக்கும்போது எங்கள் கிராமத்தின் சுற்று வட்டாரத்தில் உள்ள அத்தனை கோவில்களிலும் கடவுள் துதி(மவ்லூது)ப் பாடல்கள் பாடிக்கொண்டிருக்கும்.மேலும் இது ரபீவுல் அவ்வல் மாதமாகயால் மாலை நேரத்தில் பள்ளிவாசல்களில் நபி புகழ்(மவ்லூது)பாடல்கள் பாடுவார்கள்.இந்துக்களின் கடவுள் நம்பிக்கைப்படி அவர்கள் கோவிலில் கடவுள் துதிப் பாடல்களைத்தான் பாடுகிறார்கள்.ஆனால் பள்ளிவாசல்களில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அழைக்காதீர்கள் என அல்லாஹ்வின் தெளிவான வழிகாட்டலும்.எச்சரிக்கையும் இருக்க பள்ளியில் உட்கார்ந்துகொண்டு முஹையதீன்.ஷாகுல்ஹமீது.மற்றும் நபி ஸல் ஆகியோர்களை அழைத்து உதவிகோருவதில் பயனுண்டா.பாவமுண்டா!?