Home »
» சேலத்தில் இந்தாண்டு மாம்பழம் விளைச்சல் குறைந்துள்ளது
மாம்பழத்திற்கு பெயர் போன சேலத்தில் இந்தாண்டு விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் சந்தையில் மாம்பழங்களின் வரத்து இன்றி காணப்படுகிறது. இது மாம்பழ பிரியர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.முக்கனிகளில் முதல் கனியாக திகழும் மாம்பழங்கள் சேலம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விளைவிக்கப்படுகிறது. சேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம் என்று சொல்லும் அளவிற்கு அதன் சுவையும் மனமும் கொண்ட மாம்பழங்களில், சேலம்-பெங்களூரா, இமாம்பசந்த், மல்கோவா, அல்போன்சா, செந்தூரா, பங்கனப்பள்ளி என 50க்கும் மேற்பட்ட வகை மாம்பழங்கள் இருந்தாலும், இதில் குறிப்பிட்ட வகை மாம்பழங்கள் மட்டுமே அனைவராலும் விரும்பி வாங்கப்படுகிறது.தற்போது பூக்கள் பூத்த நிலையில் மழை பெய்யாத காரணத்தால் விளைச்சல் குறைந்து பெரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் விவசாயிகள்.சேலத்தை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து இந்த மாம்பழங்கள் சந்தைக்கு வரும். இதனால் சேலம் கடை வீதிகளில் மாம்பழம் வாசம் வீசும். ஆனால் இந்தாண்டு பழங்கள் அதிகளவில் வராத காரணத்தால் மாம்பழ பிரியர்கள் வருத்தம் அடைதுள்ளதுள்ளனர்.சேலத்து மாம்பழங்களை வெளிநாட்டிற்கும், வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கவும் முன்பதிவு நடைபெற்று வருகிறது. அதற்கான முன் பதிவில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ள மாம்பழ வியாபாரி சீனி, மாம்பழங்கள் வரத்து குறைவாக உள்ளதாகத் தெரிவித்தார்.மழை பெய்தால் மட்டுமே மா விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சேலம் மாவட்டத்தில் மாம்பழ விவசாயிகளுக்கு தனி சந்தை அமைத்து தர வேண்டும் என்பது மா விவசாயிகளின் கோரிக்கை
Related Posts:
பெரியாரின் வாழ்க்கைப்பயணம் ஒரு பார்வை September 17, 2017
உலகின் மிகப்பெரும் சுய சிந்தனையாளரும், உறுதியான பகுத்தறிவுச் சிற்பியுமான தந்தை பெரியாரின் வாழ்க்கைப்பயணம் குறித்த ஒரு பார்வை..1879&nbs… Read More
பெங்களூருவில் உள்ள பேருந்து நிலையத்துக்கு தந்தை பெரியார் பெயர்! September 16, 2017
பெங்களூருவில் உள்ள பேருந்து நிலையத்துக்கு பெரியாரின் பெயர் சூட்டப்படும் என கர்நாடகா உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.பெரியாரின் ப… Read More
நீதிமன்றம் மூலம் ஓரிரு நாளில் நல்ல தீர்வு கிடைக்கும்: மு.க.ஸ்டாலின் பேச்சு September 17, 2017
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்காக, பொதுமக்களை திரட்டி போராட திமுக தயாராக உள்ளதாக, அக்கட்சியின் செயல் தலைவர்… Read More
நவோதயா பள்ளிகள் வருவதில் தவறில்லை - அதிமுக எம்.பி வைத்தியலிங்கம் September 15, 2017
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் வருவதில் தவறில்லை என்று அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம் தெரிவித்… Read More
கைது செய்யப்பட்ட தமிழர்களை அரைநிர்வாணமாக்கி சித்ரவதை செய்வதாகப் புகார்! September 16, 2017
ஆந்திராவில் செம்மரம் வெட்டச் சென்றதாக 23 தமிழர்களை கைது செய்துள்ள போலீசார், அரை நிர்வாணத்துடன் குறுகிய சிறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக… Read More