புதன், 22 பிப்ரவரி, 2017

24ம் தேதி பிரதமருக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு!

24ம் தேதி பிரதமருக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு!

தமிழகத்தின் நீர் ஆதார  பிரச்சனைக்கு தீர்வு காணாத மத்திய அரசை கண்டித்து வரும் 24 ஆம் தேதி கோவை வரும் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி போராட்டம் நடத்துவோம் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் அவசர ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். 

இக்கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம், விவசாயிகள் வாங்கிய கடனை நிபந்தனையின்றி  தள்ளுபடி செய்ய வேண்டும், புதுக்கோட்டை நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், வரும் 24ம் தேதி கோவை வரும் பாரத பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காண்பித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என இக் கூட்டத்தில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/22/2/2017/farmers-stage-protest-against-pm-narendra-modi-24th-f

Related Posts: