ஆஸ்துமா மற்றும் நுரையீரல் போன்ற சுவாச பிரச்சனைகள் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக கூறப்படுவது, சுற்றுப்புற சூழ்நிலை, தூசுக்கள், புகைப்பிடித்தல் போன்றவைகள் தாம். இந்தப் பிரச்சனைகளை போக்குவதற்குண்டான இயற்கை வழிமுறைகளைப்பற்றி பார்ப்போம்.
ஆஸ்துமா நுரையீரல் பிரச்சனையை போக்க இயற்கை மருத்துவம். ஆஸ்துமா பிரச்சனையை போக்குவதற்கு முதலில் நமது உடம்பின் நுரையீரலை சுத்தம் செய்வதற்கு, பால் பொருட்கள் சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்தி விட வேண்டும்.
பின் இந்த மருத்துவத்தை பின்பற்றுவதற்கும் முதல் நாள் இரவு ஒரு கப் மூலிகை தேநீரை குடித்து கடுமையான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். காலை உணவு சாப்பிடுவதற்கு முன் இரண்டு எலுமிச்சை பழங்களின் சாற்றை 300 மில்லி தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.
பின் ஒரு மணி நேர இடைவெளி கழித்து, 300 மில்லி சுத்தமான திராட்சை ஜூஸைக் குடிக்க வேண்டும். குறிப்பாக, இந்த ஜூஸில் தண்ணீர் மற்றும் சர்க்கரை கலக்காமல் இருக்க வேண்டும்.
பின் தினமும் அதிகப்படியான வியர்வை வெளியேற்றுவதற்கு, கடுமையாக உடற்பயிற்சிகள் மற்றும் 10 சொட்டுகள் யூகாலிப்ட்டஸ் ஆயில் கலந்த கொதிநீரில் ஆவி பிடிக்க வேண்டும்.