சனி, 4 பிப்ரவரி, 2017

மிகப்பெரும் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிக்கும் என்றும் அறிவித்துள்ளது.

ஏன் இந்த அச்சம் ? நீதி தவறும் பட்சத்தில் TNTJ போராட்ட களத்தை சந்திக்கும்....!!
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய காட்டு தர்பாரை துகிலுரிக்கும் வகையில் சென்னை மண்ணடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும், பொதுக்கூட்டத்தில் நிறுவனர் பி.ஜைனுல் ஆபிதீன் சிறப்புரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டு 10 நாட்களுக்கு முன்னதாக காவல்துறைக்கு அனுமதி கடிதம் கொடுத்துள்ள நிலையில் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறையினர் தடை செய்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறையினர் நடந்த விதத்தை கண்டித்து பல்வேறு இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ள நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு மட்டும் அனுமதி மறுத்தது ஏன் ?
மற்ற இயக்கங்களை போன்று TNTJ சார்பாக ஆர்ப்பாட்டம் கூட அறிவிக்கவில்லை, மாறாக பொதுக்கூட்டமே அறிவிக்கப்பட்டது. அப்படியிருந்தும் TNTJ யின் பொதுக்கூட்டத்தை ரத்து செய்தது ஏன் ? ஏன் இந்த அச்சம் ?
TNTJ பொதுக்கூட்டம் நடத்தினால் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் லட்சக்கணக்கான மக்களுக்கு செய்தி நேரடியாக சென்றடையும்.
7 கோடிக்கும் அதிகமான முறை பார்வையிடப்பட்ட Onlinepj இணையதளத்தில் பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
1 லட்சம் பின்தொடர்பாளர்களை கொண்ட தவ்ஹீத் ஜமாஅத் முகநூல் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
லட்சோபலட்ச TNTJ தொண்டர்கள் முகநூலிலும், யூடியூபிலும் வீடியோவை பதிவேற்றம் செய்வார்கள். பல்வேறு மர்கஸ்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்படும்.
இதன்மூலம் காவல்துறையின் காட்டுத்தர்பார் கோடிக்கணக்கான மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், தமிழக மக்களுக்கும் சென்றடையும்.
சகோதரர் PJ அவர்களின் பேச்சு மக்களின் மனதில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நம்மை விட அரசாங்கம் நன்கு அறிந்தே இந்த பொதுக்கூட்டத்திற்கு தடை விதித்துள்ளது.
இருப்பினும் அரசின் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் நீதியை பெற்றுத்தரும் என்று நம்புகிறோம்.
ஒருவேளை மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் அரசின் நடவடிக்கை இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக மிகப்பெரும் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிக்கும் என்றும் அறிவித்துள்ளது.
நீதி தவறினால் TNTJ போராட்ட களத்தை சந்திக்கும் இன்ஷா அல்லாஹ் !!