புதன், 21 ஜூன், 2017

பொய்யான தகவல் என மத்திய அரசு மறுப்பு*

கடந்த சில நாட்களாக மத்திய அரசின் சுற்றறிக்கை போன்ற ஒரு கடிதம் சமூக தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இது குறித்து நமது தோழர்கள் யாரும் ஏமாந்து போக வேண்டாம் என்பதற்கான விழிப்புணர்வுக்காக இந்த பதிவு*
சொத்து பத்திரத்துடன் 'ஆதாரை' இணைக்க வேண்டுமா?....*பொய்யான தகவல் என மத்திய அரசு மறுப்பு*
விவசாய நிலம், விவசாயத்துக்கு பயன்படாத நிலம், வீடு ஆகிய சொத்து பத்திரத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டயமாக்கி உத்தரவி்ட்டுள்ளதாக இணைதளங்களில் உலவிவரும் செய்தி தவறானது என்று மத்திய அரசு மறுத்துள்ளது.
வங்கிக்கணக்குடன் ஆதாரை இணைக்க வேண்டும், வருமான வரி தாக்கல் செய்யும்போது, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் மத்தியஅரசு உத்தரவிட்ட நிலையில், இப்போது சொத்து பத்திரங்களுடன் ஆதார் இணைக்கவும் கட்டாயமாக்கியதாக அரசுமுத்திரையுடன் கூடிய அறிவிக்கை இணையதளங்களில் உலவிவந்தது. இந்த செய்தி தவறானது என்று மத்திய செய்தித்துறையின் இயக்குநர் நோரன்ஹா தெரிவித்துள்ளார்.

No automatic alt text available.

Related Posts: